பயனுள்ள தகவல்மருத்துவம்

சர்க்கரை நோய் பயமா? இந்த வேப்பம் டீ குடிங்க… ஆயுசுக்கும் வராது… எப்படி தயாரிப்பது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

? சர்க்கரை நோய் பயமா? இந்த வேப்பம் டீ குடிங்க… ஆயுசுக்கும் வராது… எப்படி தயாரிப்பது?

advertisement by google

சர்க்கரை நோயானது இந்தியாவின் அதிகப்பட்சமான மக்கள் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மேலும் உலகளவில் மக்களுக்கு ஒரு தலைவலியாய் இந்த நோய் உள்ளது. இதனால் அதிக மக்கள் சர்க்கரை அளவை குறைக்க அதிக செலவுகள் செய்து வருகின்றனர்.

advertisement by google

சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பின் அறிக்கையின் படி உலகம் முழுவதும் 463 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2045 ஆம் ஆண்டுக்குள் 153 பில்லியனாக மாறும் என கூறப்படுகிறது.

advertisement by google

சர்க்கரை நோய் என்பது உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் (குளுக்கோஸ்) அளவு அதிகமாவதாகும். இதை மீண்டும் குறைப்பது சவாலான காரியமாக இருப்பதால் சர்க்கரை நோய் மோசமான நோயாகும். இது இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தி சில கடுமையான நோய்களுக்கு வழி வகுக்கிறது.

advertisement by google

இதை சரிசெய்வதற்கு பல நாட்களுக்கு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டி வரும். ஆனால் சில வாழ்க்கை முறை நடவடிக்கை மூலமாகவும் இரத்த சர்க்கரையின அளவை குறைக்க முடியும். நமக்கு ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கிய பகுதியாக இருப்பது உணவு பழக்கம் ஆகும்.
நிபுணர்கள் கூற்றுப்படி சர்க்கரை நோய்க்கு அதிக நார் மற்றும் புரத சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை, கொழுப்புகள் மற்றும் அதிக கலோரியுள்ள உணவு வகைகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். சில பாரம்பரிய மூலிகைகள் நமது உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன.

advertisement by google

அதற்கு முக்கியமான உதாரணம் வேப்ப இலைகள்தான். இந்தியா முழுவதும் அதிகமாக விளையும் வேப்ப இலை முக்கியமான மூலிகை தாவரமாகும். தவிர இவை ஆக்ஸிஜனேற்றிகளாகவும் கிருமிகளின் அழிப்பானகவும் செயல்ப்படுகிறது.

advertisement by google

இந்தியர்களிடம் குறைவாக இருக்கும் ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?
இன்சுலின் அல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அறிகுறிகளை கட்டுப்படுத்த வேப்ப இலை பெருமளவில் பயன்படுகிறது. சாதரணமாக வேப்ப இலைகளை மென்றே சாப்பிட்டு விடலாம் அல்லது அவற்றை கொண்டு தேநீர் செய்யலாம். இதற்காக நீங்கள் கடைகளில் வேப்ப இலை தூள்களை வாங்க வேண்டி இருக்கும் அல்லது உங்கள் வீட்டிலேயே வேப்ப இலைகளை வெயிலில் காயவைத்து தூளாக்கி வைத்துக்கொள்ளலாம்.

advertisement by google

இந்த கலவையில் இலவங்க பட்டையையும் இணைப்பது சர்க்கரை நோயாளிக்கு நன்மை பயக்கும். டயாபடிக் என்ற பத்திரிக்கையின் கூற்றுப்படி இரத்த சர்க்கரையில் கொழுப்பின் அளவை சரிசெய்ய இலவங்க பட்டை உதவிப்புரிகிறது. இது சர்க்கரை மற்றும் இதயம் தொடர்பான நோய்களையும் குறைப்பதாக அறியப்படுகிறது. இப்போது அந்த வேம்பு தேநீரை எப்படி தயாரிப்பது எப்படி என பார்ப்போம்.

வேம்பு தேநீர் செய்வதற்கான செய்முறை

தேவையான பொருட்கள்:

1 டீஸ்பூன் வேப்ப இலை தூள்
ஒன்றரை கப் தண்ணீர்
அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள்

செய்முறை:

வேப்ப இலை தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் இரண்டையும் தண்ணீரில் வேகவைக்கவும்.

பிறகு அதில் சிறிது டீ தூள் கலந்து கொள்ளவும். இந்த பானம் கசப்பானது என்றாலும் தேநீர் வாசத்திற்காக தேயிலை தூள் சேர்க்கப்படுகிறது.
இதை தேநீர் போல சாப்பிட விரும்புவோர் இந்த பானத்தில் சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் அதனால் கசப்பு சுவை மாறப்போவதில்லை.
ஆனால் உங்கள் அன்றாட வாழ்க்கையில் எந்த வகையான மருந்துகளையும் எடுத்துக் கொள்வதற்கு முன்பு ஒருமுறை மருத்துவரை ஆலோசிப்பது நல்லது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button