பயனுள்ள தகவல்மருத்துவம்

நரம்பு வலி, கால் மூட்டு வீக்கத்துக்கு பாட்டி வைத்தியம் புளிய இலை தான், என்ன செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

? நரம்பு வலி, கால் மூட்டு வீக்கத்துக்கு பாட்டி வைத்தியம் புளிய இலை தான், என்ன செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க

advertisement by google

மூட்டு வீக்கம் என்பது வலிகளோடு கூடிய உபாதை. உள்பக்கம் வலியும் மேல்பக்கம் வீக்கமும் என இரண்டையும் குணப்படுத்தும் தன்மை புளிய இலைக்கு உண்டு. காலங்காலமாக முன்னோர்களின் வைத்தியத்தில் மூட்டு வீக்கத்துக்கும் வலிக்கும் கைகொடுப்பது புளிய இலை தான்.

advertisement by google

புளிய மரத்தின் நிழலில் கூட நிற்க கூடாது என்று சொல்லும் பெரியவர்கள் மூட்டுகளில் வீக்கமும் வலியும் தொடர்ந்து இருந்தால் அந்த புளிய இலைகளை கொண்டு தான் வைத்தியம் செய்வார்கள். மருத்துவ குணம் நிறைந்தவை புளிய மரம் என்றாலும் கடும் விஷம் கொண்ட ஜந்துக்கள் வாழும் இடம் என்பதால் இதை யாரும் வீடுகளில் வளர்ப்பதில்லை.
புளிய மரத்தின் நிழல் ஆகாது என்றாலும் புளிய மரத்தின் இலை சிறந்த மருந்துபொருளாக பயன்படுத்தப் படுகிறது. இது ஆயுர்வேதமருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது. வீட்டில் பெரியவர்கள் புளிய இலை கொழுந்தை பறித்து அதை துவையல் கூட்டு செய்து தருவார்கள். இது கண் தொடர்பான குறைபாட்டை நீக்கும்.

advertisement by google

மூட்டு வலி வாதத்தால் வந்தாலும் , வாயு குறைபாட்டால் வந்தாலும் , சுளுக்கு ஏற்பட்டாலும் இவை கால் மூட்டுகளில் ரத்தக்கட்டு, வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த புளிய இலை வைத்தியம் கைகொடுக்கும். எளிதாக கைகொடுக்கும் இந்த புளி வைத்தியத்தை எல்லோரும் செய்யலாம்.

advertisement by google

​புளிய இலை பற்று –
சுளுக்கு, ரத்தக்கட்டு

advertisement by google

புளிய இலை – 1 கைப்பிடி

advertisement by google

கல் உப்பு – சிறிதளவு

advertisement by google

கடுகு – 2 டீஸ்பூன்

புளிய இலையை காம்பு நீக்கி அதில் உப்பு, கடுகு சேர்த்து மைய அரைக்கவும். அம்மி அல்லதுகை உரலில் இடித்து மிக்ஸியில் அரைக்கவும் செய்யலாம். இந்த மசியலை இலேசாக சூடு செய்து பொறுக்கும் சூட்டில் மூட்டுகள் வீங்கியிருக்கும் இடத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து காய்ந்ததும் கழுவி எடுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் வரை செய்தால் இது காலில் சுளுக்கு, ரத்தக்கட்டு, வீக்கம் போன்றவற்றை படிப்படியாக குணமாக்கும்.

புளிய இலை கொழுந்தாக இருக்க கூடாது. நன்றாக முற்றிய இலையாக இருக்க வேண்டும். பயன்படுத்தும் போது காய்ந்து இருக்க கூடாது.

​புளிய இலை பற்று –
தீவிர மூட்டுவலி

கை, கால், மூட்டு வலிகள் இருக்கும் போது இந்த பற்று போடலாம். நன்றாக ஓய்வு இருக்கும் நிலையில் இதை செய்ய வேண்டும். புளிய இலையை எடுத்து சுத்தம் செய்து வைக்கவும். வலி இருக்கும் இடங்களில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணேய் தேய்க்க வேண்டும். அதற்கேற்ப தேவையான அளவு எண்ணெய் எடுத்து இலேசாக சூடு செய்து வலி இருக்கும் அனைத்து இடங்களிலும் தடவி விடவும்.

நன்றாக தடவிய பிறகு புளிய இலையை அதன் மேல் வைத்து இலேசாக தட்டினால் அவை ஒட்டி கொள்ளும். இந்நிலையில் அப்படியே கை, கால்களை அசைக்காமல் படுத்திருக்கவும். புளிய இலை எண்ணெயோடு கலந்து சருமத்தின் உள்ளே ஊடுருவக்கூடும். எண்ணெய் உலர்ந்ததும் இவை சருமத்திலிருந்து கீழே விழத்தொடங்கும்.

அதிக வலியால் உபாதை படுபவர்கள் தினமும் இரண்டு வேளை காலை மாலை என தொடர்ந்து செய்துவந்தால் அதிசயத்தக்க வகையில் வலி குறையக்கூடும். மூட்டு வலி, நரம்பு வலி வரை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

புளிய இலை பற்று –
மூட்டு வீக்கம்

தேவை

புளிய இலை – 2 கைப்பிடி

வேப்ப எண்ணெய் – 3 டீஸ்பூன்

புளிய இலையை உருவி தனியாக காம்பு நீக்கி எடுக்கவும். அடுப்பில் மண்சட்டி வைத்து வேப்ப எண்ணெய் சேர்த்து அவை இலேசாக சூடானதும் புளிய இலைகளை சேர்த்து வதக்கவும்.

இளஞ்சூடாக இருக்கும் போதே இதை எடுத்து மூட்டுகளில் வீக்கம் இருக்கும் இடங்களில் வைத்து நன்றாக அழுத்தி மேல் சுத்தமான துணியை கொண்டு மூடிவிடவேண்டும். தினமும் இரவு நேரத்தில் இதை செய்துவந்தால் ஒரே வாரத்தில் வீக்கம் குறைந்து விடும். காயங்கள் இருக்கும் வீக்கங்களிலும் இந்த ஒத்தடம் கொடுக்கலாம்.

​புளிய இலை பற்று – நரம்பு வலி

மூட்டு வலி தீவிரமாக இருக்கும் போது கால்களிலிருக்கும் நரம்புகளிலும் வலி உண்டாக கூடும். இந்நிலையில் மூட்டு வலியும், நரம்பு வலியும் இணைந்து பெருமளவு வலி உபாதை தரக்கூடும். இதற்கு புளிய இலை ஒத்தடமும் பற்றும் தீர்வு தரும்.

தேவை

புளிய இலை – 2 கைப்பிடி

காம்பு நீக்கிய புளிய இலையை இட்லி பானையில் அவிக்க வேண்டும். இதை எடுத்து மெல்லிய துணியில் சுற்றி வலி இருக்கும் இடம் முழுக்க ஒத்தடம் கொடுக்க வேண்டும். பொறுக்கும் சூட்டில் நன்றாக ஒத்தடம் கொடுத்த பிறகு அதை அப்படியே வலி இருக்கும் இடங்களில் வைத்து கட்டிவிட வேண்டும். ஒரு நாள் இடைவெளியில் தொடர்ந்து 10 முறை கட்டிவந்தால் வலி குறையக்கூடும்.

புளிய இலை பற்று என்று சொல்லக்கூடிய இந்த கைவைத்தியத்தை எல்லோரும் செய்யலாம். இவை வெளிப்புற பூச்சு என்பதால் பக்கவிளைவும் இல்லை. மேலும் இவை சருமத்தை பாதிக்காமல் வலியை நீக்கும் நிவாரணியாக செயல்படுகிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button