t

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை – கணவருக்கு போலீஸ் வலைவீச்சு? தூத்துக்குடியில் பரபரப்பு?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை – கணவருக்கு போலீஸ் வலைவீச்சு ; தூத்துக்குடியில் பரபரப்பு

advertisement by google

✍முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கணவர் கொலை செய்துள்ளார். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தவசிப்பெருமாள் சாலை தெருவில் உள்ள வீட்டில் நேற்று காலை (29.09.2020) கருப்பசாமி (வயது45) என்பவர் தனது மனைவி சண்முகலெட்சுமி (வயது40) என்பவருடன் வாடகைக்கு குடியேறியுள்ளார். இந்நிலையில் கருப்பசாமி மனைவி சண்முகலெட்சுமி இன்று பூட்டிய வீட்டிற்குள் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது கணவர் கருப்பசாமி நேற்றே கொலை செய்துவிட்டு கதவை பூட்டிவிட்டு சென்றிருப்பதாக தெரிகிறது. இது குறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

advertisement by google

✍சம்பவ நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அவருடன் பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அவர்களும் உடனிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத் செெ

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button