சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் இளைஞரை காரில் கடத்தி படுகொலை?அதிமுக பிரமுகர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் இளைஞரை காரில் கடத்தி படுகொலை.. …
அதிமுக பிரமுகர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன்
இவர், கடக்குளம் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
செல்வத்திற்கும், சரத்துக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்த செல்வனை, காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார்
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை நடத்தினர். அதில், தட்டார்மடம் அருகே செல்வன் காரில் கடத்திச் செல்லப்படும் காட்சி பதிவாகி இருந்தன.
செல்வன் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளான அவரது உறவினர்கள், உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செல்வத்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், கொலைக்கு காரணமான அதிமுக பிரமுகர் திருமணவேலுவை காப்பாற்ற தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் முயல்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
சாத்தான்குளத்தில் கொலை சம்பவம் தீவிரமடைந்ததால், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல், மற்றும் மேலும் சிலர் மீது கொலை வழக்கு உள்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, சாத்தான்குளத்தில் தந்தை – மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.