t

தாயை தவறாக பேசியதால், லாரி டிரைவர் கழுத்தறுத்து கொடூரக்கொலை ? நண்பர்கள் வெறிச்செயல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடியில் தாயை தவறாக பேசியதால், லாரி டிரைவர் கழுத்தறுத்து கொடூரக்கொலை – நண்பர்கள் வெறிச்செயல்

advertisement by google

✍தூத்துக்குடியில் மது அருந்தும் போது தனது தாயை தவறாக பேசியதால் லாரி டிரைவரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த நண்பர்கள் இருவர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.

advertisement by google

✍தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள பெரிய நாயகிபுரத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் முருகேசன் (வயது38). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் அஜித்(வயது21), காலான்கரையைச் சேர்ந்த ராஜமுந்திரி மகன் முனீஸ் (வயது23). மூவரும் நண்பர்களாக லாரி டிரைவராக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு 7 மணியளவில் அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது முருகேசன் அஜித்தின் தாயார் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

advertisement by google

✍இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அஜித் மற்றும் முனீஸ் இருவரும் சேர்ந்து முருகேசனை தாக்கியுள்ளனர். பின்னர், தலைப்பகுதி, காதுபகுதிகளில் வெட்டப்பட்டு, கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.பின்னர் சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி பழனிக்குமார் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கொலை செய்த அஜித்,முனீஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த படுகொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button