கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கு குண்டாஸ் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நடவடிக்கை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கு குண்டாஸ் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நடவடிக்கை
✍தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேடிசிநகர் கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
✍கடந்த மாதம் 21.07.2020 அன்று கேடிசி நகர் பகுதியில், கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் பிரேம்குமார் (வயது27) என்பவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன்கள் விக்னேஷ்வரன் (வயது28), இசக்கிகணேஷ் (வயது27), கீழக்கூட்டுடன்காடு பூல்பாண்டி மகன் முத்துப்பாண்டி (வயது28) ஆகிய மூன்று பேரையும் சிப்காட காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை சமர்ப்பித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேற்படி குற்றவாளிகளான 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், விக்னேஷ்வரன், இசக்கி கணேஷ், மற்றும் முத்துப்பாண்டி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.