பள்ளிச் சிறுமிக்கு.. முகநூலில் வலைவிரித்தகாதல் காமுகன்?இ.பாஸ் இன்றி பைக்கில் அழைத்து சென்று பாலியல் கொடுமையில் ஈடுபட்ட காமுகன் போலீசாரால் கைது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பள்ளிச் சிறுமிகளுக்கு.. முகநூலில் வலைவிரிக்கும் காதல் காமுகன்…! இ.பாஸ் இன்றி பைக்கில் வலம்
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கேட்டு மக்கள் வாரக்கணக்கில் காத்திருக்கும் சூழலில், முகநூல் மூலம் காதல் வலையில் வீழ்த்திய பள்ளி மாணவியை, மதுரையில் இருந்து இ.பாஸ் இல்லாமல் ஊர் ஊராக அழைத்துச்சென்று பாலியல் கொடுமையில் ஈடுபட்ட காமுகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த14 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். ஊரடங்கு காலக் கட்டத்தில் அவர் எங்கு சென்றார் ? என்று பெற்றோரும் உறவினர்களும் பதறியபடியே தேடினர். சிறுமி எங்கும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மாணவியின் செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்த போது, செல்போன் சிக்னல் பொள்ளாச்சி, நத்தம், திண்டுக்கல், பழனி என ஒவ்வொரு ஊராக மாறிக் கொண்டே இருந்தது. பின்னர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. 2 நாட்கள் கழித்து மாணவியின் செல்போன் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருப்பது போன்று சிக்னல் காட்டியது.
அங்கு ஊடங்கை மீறி ரகசியமாக இயங்கி வந்த சுகன்யா தங்கும் விடுதியில் முகமது சபீன் என்ற இளைஞனுடன் அந்த மாணவி ஒரு அறையில் தங்கி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
மாணவியிடம் நடத்திய விசாரணையில் முகநூல் பழக்கத்தால் நிகழ்ந்த விபரீத சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பள்ளிகள் திறக்கப்படாததால் முகநூலில் மூழ்கி இருந்த அந்த சிறுமியை தொடர்ந்து மெசஞ்சர் மூலம் புகழ்ந்து பேசி மயக்கி நண்பராகி உள்ளான் முகமது சபீன். பின்னர் அப்படியே படிப்படியாக சிறுமியை காதல் வலையிலும் சிக்கவைத்துள்ளான்.