திண்டுக்கல் அருகே குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றவர் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பச்சிளங்குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றவர் கைது
திண்டுக்கல் அருகே குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் அருகே உத்தனம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கதிர்வேல் 22. இவரது மனைவி சுகன்யா. இவர்களின் மகள் தர்சிகா ஸ்ரீ 7 மாதம்.
கதிர்வேல் குடும்பத்துக்கும் பண்ணைபட்டியை சேர்ந்த செந்தில்குமார் 44, குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் கதிர்வேல் வீட்டுக்கு வந்த செந்தில்குமார், தொட்டிலில் தூங்கிய குழந்தையை குளக்கரைக்குத் தூக்கிச் சென்றார்.
குழந்தையின் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார்.
குழந்தையின் அழுகுரல் கேட்டுவந்த சுகன்யா தடுத்தார்.
அவர் மீதும் பெட்ரோலை ஊற்றி பற்ற வைக்க செந்தில்குமார் முயற்சி செய்தார்.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தாய், மகளை மீட்டனர்.
சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.