இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விளையாட்டு

இரவுவிரிவானபரபரப்பு செய்திகள்(17.9.2019)தமிழகம் இந்தியா உலகம்

advertisement by google

???? விண்மீண்நியூஸ்??????”1 ஆண்டுக்குள் தமிழகத்தில் 820 மின்சாரப்பேருந்துகள் இயங்கும்”

advertisement by google

ஒரு முறை சார்ஜ் போட்டால் 250கி.மீ பயணிக்கும் வகையிலான பேருந்துகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்
[9/17, 7:23 PM] விண்மீண்நியூஸ்2: ??”நமது சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவர்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டார்!”

advertisement by google

– சாதுக்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் பேச்சு
[9/17, 7:23 PM] விண்மீண்நியூஸ்2: ??“இன்று காவி உடை அணிந்து கொண்டு பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர், இது போன்ற சம்பவங்கள் கோவிலுக்குள் நடைபெறுகின்றன, இதுவா நமது மதம்?” –

advertisement by google

சாதுக்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் பேச்சு
[9/17, 7:23 PM] விண்மீண்நியூஸ்2: ??சென்னையில் 28 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
[9/17, 7:23 PM] விண்மீண்நியூஸ்2: ??சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு அக். 1ம் தேதி வரை காவல் நீட்டிப்பு – டெல்லி சிறப்பு நீதிமன்றம்..
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??சாரதா சிட்பண்ட் மோசடி: முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையரைப் கண்டுபிடிக்க தனிப்படை- சிபிஐ ஏற்பாடு….

advertisement by google

புதுடெல்லி ;- சாராதா சிட்பண்ட் மோசடி வழக்கில் தொடர்புடைய முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரைக் கண்டுபிடிக்க தனிப்படையை சிபிஐ அமைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??பிரதமர் மோடி தலைமையிலான அரசு 5 ஆண்டு காலத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட 50 பெரிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??அமராவதி: ஆந்திராவின் குண்டு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கர்னூல் மாவட்டம் மகாநந்தி கோயிலுக்குள் வெள்ளம் புகுந்து ஆர்ப்பரித்து ஓடுகிறது
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??பிரதமர் மோடியைச் சந்திப்பது அரசியலமைப்புக் கடமை: மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி …
கொல்கத்தா ;- பிரதமர் மோடியைச் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான், அரசியலமைப்புக் கடமை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்

advertisement by google

பாஜக தலைமையில் 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தபின், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி முதல் முறையாகச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடியைச் சந்திக்க நாளை மாலை 4.30 மணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??பெரியார் புகழ் ஓங்குக: தமிழில் ட்வீட் செய்த பினராயி விஜயன்….

advertisement by google

பெரியார் புகழ் ஓங்குக என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் பதிவிட்டுள்ளார்.
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ?? #BIGNEWS

advertisement by google

PF வட்டி விகிதம் 0.10% உயர்வு!
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??கொச்சி மராடு குடியிருப்புவாசிகளிடம் கருத்து கேட்க புதிய கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும்

கொச்சி: கொச்சி மராடு குடியிருப்புவாசிகளிடம் கருத்து கேட்க புதிய கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி தலைமையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடிக்கப்படும் 400 வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு கட்டுமான நிறுவன இழப்பீடு வழங்க அனைத்துக்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??“அமித்ஷா தமிழகம் வரும்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” – தமிழக காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்: கூடுதல் துணை ஆணையர் சுற்றறிக்கை

சென்னை: உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் சீருடையில் வந்தாலும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என கூடுதல் துணை ஆணையர் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் வந்ததை தொடர்ந்து கூடுதல் துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் காவல் கூடுதல் துணை ஆணையர் கடிதம் அனுப்பினார்.
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: இந்தியை திணித்தால் மீண்டும் ஒரு மொழிப்போரை தொடங்குவோம்!

                                வ.கௌதமன் எச்சரிக்கை!

அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள பிறமொழிகள் அனைத்தையும் புறக்கணித்து இந்தி மொழி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசியிருப்பது  இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சி! மொழிவழி மாநிலம் என்ற சட்ட ஒற்றுமையை காலால் மிதித்து அவமதிக்கும் படுபாதக செயல்! 

இந்தியாவின் அடையாளத்தை உலகெங்கும் தெரிவிப்பதற்கு இந்தியால் மட்டுமே முடியும் என்று நாகூசாமல் பேசும் அமித்ஷா அவர்களுக்கு உலகெங்கும் அதிகம் பேசும் மொழி எதுவென்று தெரியுமா? அப்படி பார்த்தால் முதலில் ஆங்கிலம், இரண்டாவது தமிழையுந்தான் இந்திய ஒன்றியத்தின் அடையாளத்தை தெரிவிப்பதற்கு பரிசீலிக்க முடியும். ஏனென்றால் உலகெங்கும் வாழும் மக்கள் கணிசமாக பேசுகிற மொழி தமிழும் ஆங்கிலமும்தான். இவை ஒரு புறம் இருக்கட்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் இந்த இந்திக் கருத்துகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரண்பாடானவை! இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்புஎண் – 343, இந்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் மொழியாக இந்தியையும், அடுத்த நிலையில் ஆங்கிலத்தையும் கூறுகிறது. ஆனால் இந்திமொழியை ”தேசிய மொழி” என இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.

ஒரே நாடு, ஒரே மொழி என்று அனைத்தையும் ஒற்றைத்தன்மையாக மாற்றி இறுதியில் சமற்கிருதத்தை முதன்மைப்படுத்துவதற்கு முதற்கட்டமாக இந்தியை முன்னிறுத்தவே இந்துத்துவாவின் அடிப்படை நோக்கம் என்பது இப்போது அமித்ஷாவின் அவர்களின் பேச்சில் வெட்டவெளிச்சமாகிவிட்டது.

சமற்கிருத மொழிவாரம், இந்திமொழி பரப்பும் வாரம், பள்ளிக்கல்லூரிகள், அனைத்துப் பல்கலைக்கழகங்களில் இந்தியை முதன்மைப்பாடமாக வைக்க ஆணை! சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை இந்திகட்டாய பாடம், என பல்வேறு தளங்களில் இந்தியை கொண்டுவந்துவிட்டது பா.ஜ.க. அரசு. அதுமட்டுமா? வடமாநிலத்தவர் அன்றாடம் தமிழகத்தில் குடியேறுகின்றனர். கடைசி ஐந்து ஆண்டுகளில் இதுவரை ஒரு கோடியே பதினான்கு லட்சம் பேர் வலிந்து தமிழ்நாட்டிற்குள் குடியேற்றப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தமிழைக் கற்றுக்கொண்டு இங்கு வேலைக்கு வரவில்லை! மாறாக இந்தியோடு வருகிறார்கள்! ஆகவே வெளிமாநிலத்தவர் வழியாகவும் இந்தியை திணிக்க முயல்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இவர்களின் ஒரே நோக்கம் தமிழ் நாட்டில் தமிழர்களை சிறுபான்மையினர்களாக ஆக்க வேண்டுமென்பதே.

இந்தியா என்பது ஒரு நாடல்ல. அது பல்வேறு தேசிய இன அரசுகளின் ஒன்றியம். இந்தியன் என்ற ஒரு தனி தேசிய இனம் கிடையாது! ஆகவே இந்திமொழி தேசியமொழி கிடையாது. இந்தி என்பது ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்றுதான் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை அப்படியே கசக்கி எறிந்து விட்டு, இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்ட நாளில் (14 செப்டம்பர் 1949), “இந்தி வாரம்” கடை பிடிக்கிறோம் என்று பா.ச.க. அரசு கொக்கரிப்பது சட்டத்திற்கு எதிரான ஒன்று!

நாம் இனியும் பொறுமை காக்கக் கூடாது, 1938-ல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டமும், 1965 இல் பெரும் நெருப்பாக மூண்ட மொழிப்போரும் மீண்டும் நம்மை எழுச்சியுற செய்யவேண்டும்! தாளமுத்து, நடராஜன், கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் அரங்கநாதன், விராலிமலை சண்முகம், சிவகங்கை இராசேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என 12-க்கும் மேற்பட்ட மொழிப்போர் ஈகிகள் தங்கள் தேகங்களை தீக்கிரையாக்கியும், நஞ்சுண்டும் தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க!! என்றே மடிந்தனர். நஞ்சுண்டும், துப்பாக்கிக் குண்டேந்தியும் இறந்தோர் பலர். திருப்பூர் குமாரப்பாளையத்தில் 600க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து ஒரே குழியில் குப்பைகளைபோல் கிடத்தி புதைக்கப்பட்டனர்.

உலகில் நடந்த தனது தாய் மொழிக்கான உரிமைப்போரில் தமிழர்கள் தந்த உயிர்கொடை வரலாற்றைப்போல் வேறு எந்த இனத்திலும் குறிப்புகள் இல்லை.

தமிழ்நாட்டைத் தவிர கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் தங்களது மொழிக்கு முன்னுரிமைக் கொடுக்கிறது. ஆனால் தமிழ்நாடு அ.இ.அ.தி.முக அரசு பா.ச.க.வின் கிளைக் கம்பெனியாக செயல்படுகிறது. அனைத்து எதிர்கட்சிகளும் அமித்ஷா அவர்களின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் அ.இ.அ.தி.மு.க அரசு இதுவரை ஒரு கண்டன அறிக்கைக்கூட தெரிவிக்கவில்லை.

தமிழக மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அடுத்த மொழிப்போருக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ளவேண்டும்! நம்மீது பா.ச.க. அரசு போர் தொடுக்க தயாராகிவிட்டது. நாம் மூன்றாம் மொழிப்போருக்கு ஆயத்தமாகவேண்டும்! இந்தியாவின் இந்தித் திணிப்பை எதிர்த்து மீண்டும் களம் காணவேண்டும்!

அதேபோல், 5, 8 – ஆம் வகுப்புகளுக்கு புதியக் கல்விக் கொள்கையில் அடிப்படையில் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது, நமது மாணவர்களை கல்வியிலிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தும் சூழ்ச்சியாகும். இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தமிழக அரசும் முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரமாட்டோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கடந்த 2019 பிப்ரவரி 22-ஆம் தேதி அறிவித்தார். தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பில் நாங்களும் அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களையும் அமைச்சர் திரு. அன்பழகன் அவர்களையும் நேரில் சந்தித்து இத்தேர்வின் அபாயங்களை நேரில் சந்தித்து விளக்கினோம். நிதானமாக பரிசீலிக்கிறோம் என்றார்கள். இப்போது மத்திய அரசின் ஆணைப்படி, நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செப்டம்பர் 13.09.2019 அன்று அதிகாரபூர்வமாக
அறிவித்திருக்கிறது.

என்ன பரிசீலனை நடந்தது? மக்களின் கருத்தினை கேட்டார்களா? பின்பு யாரை திருப்திப்படுத்த இந்த அறிவிப்பு? பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியின் முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள் இந்த பொதுத்தேர்வை ஆளுமையோடு எதிர்க்கிறார். ஆனால் தமிழக அரசு ஆதரிக்கிறதென்றால் இவர்கள் தமிழ் மக்களுக்கான ஆட்சியாளர்களா? இல்லை பா.ச.க.வின் எடுபிடிகளா?

ஏழைய எளிய மக்களின் ”தமிழ்ப்பிள்ளைகள் கல்வி என்ற வாசலை தொடவே கூடாது! கல்வி என்பதை நாங்கள் மட்டும்தான் கற்கவேண்டும் என்ற உயர் சாதியினரின் பங்களியாக தமிழக அரசு மாறியதின் நோக்கம் என்ன? தில்லி என்ன சொன்னாலும் அதை செய்யத்தான் நீங்களென்றால், ஓட்டுபோட்டு உங்களை பதவியில் உக்கார வைத்த மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் நல்பரிசு இதுதானா? இந்த 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு பொதுதேர்வு என்பது படித்துக்கொண்டிருக்கும் நம் வீட்டு பிள்ளைகளை தடுத்து நிறுத்தி வீட்டில் முடக்குவதற்கான உத்தி. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு என்ன நடந்ததோ அது இனி 5-ஆம் வகுப்புப் பிள்ளைக்கே நடக்கப் போகிறது. அதைத்தான் புதிய கல்விக் கொள்கை முடிவு செய்திருக்கிறது.

பா.ச.க. அரசு கொண்டுவரும் குலக் கல்வி திட்டம்தான் இந்த புதிய கல்விக் கொள்கை திட்டம். கல்வியை நாங்கள் மட்டும்தான் படிக்கவேண்டும் அதை நீங்கள் படிக்கக் கூடாது நீங்கள் உங்கள் குலத்தொழிலை மட்டும் பார்த்து எங்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் “ இதைத்தான் புதிய கல்விக்கொள்கை வழியாகவும், 5 , 8 – ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பதெல்லாம். இதற்கு தமிழக அரசு தமது மண், மக்களின் பிள்ளைகளை புதிய கல்விக் கொள்கை என்கிற பலிபீடத்தில் காவு கொடுக்க பார்க்கிறது.

ஆபத்தான இந்த புதிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு பக்கங்களும் இப்போது நம்மை கொலைசெய்யும் கருவியாக மாறிக் கொண்டு வருகிறது. சமற்கிருதம் – இந்தி, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இன்னும் அடுத்தடுத்த அபாயங்கள் நம்மை நெருங்கப்போகின்றன! நாம் விழித்தெழ வேண்டும்! பா.ச.க.வின் பலமுனை தாக்குதலுக்கும், இன அழிப்பு திட்டத்திற்கும் துணைபோகும் தமிழக அரசின் நயவஞ்சக செயலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் மக்கள் திரள் போராட்டங்களின் வாயிலாகவே மட்டுமே முறியடிக்க முடியும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும். அதற்கான முன்னெடுப்பிற்கு மன உறுதியோடு தயாராக வேண்டும்.

                                        வ.கௌதமன் 
                                        பொதுச் செயலாளர் 
                                        தமிழ்ப் பேரரசு கட்சி

[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன உரிமை சட்டத்தினால் அதிக பாரம் ஏற்றுவதில்லை இதனால் வாடகை உயர்வை உயர்த்தி தரக்கோரிய கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி – வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு.
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??சென்னையில் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி ஆணையம்
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??”தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் தனது வாழ்வின் இறுதி மூச்சுவரை அர்ப்பணித்தவர் பெரியார்!” – திருமாவளவன்
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??மதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் – திரிபுரா முதல்வர்
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: 11,12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5ஆக குறைக்க முதல்வருக்கு கோப்புகள் அனுப்பி வைப்பு

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சீருடைகள், காலணிகள் வழங்கப்படும்

– அமைச்சர் செங்கோட்டையன்

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மத்திய அரசின் திட்டமாகும்

5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்

பொதுத்தேர்வு திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசிடம் 3 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்கப்பட்டுள்ளது

– அமைச்சர் செங்கோட்டையன்
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பு:

கேள்வி: ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சர்கள் யாரும் பேசவில்லை இப்பொழுது பேசுகிறார்கள்?

ஜெயலலிதா இருக்கும் போது அவர்கள் அடிமையாக இருந்தார்கள் இப்பொழுது அவர்கள் கோமாலியாக இருக்கிறார்கள்
[9/17, 7:25 PM] விண்மீண்நியூஸ்2: ??பாமக கூட்டங்களில் இனி பேனர்கள் வைக்க கூடாது, சுவர் விளம்பரம் செய்யக்கூடாது – ராமதாஸ்..?????winmeennews.com????

advertisement by google

Related Articles

Back to top button