கோவில்பட்டி இளையரசனேந்தல் குறு வட்டத்தில் உள்ள 12 வருவாய் கிராமங்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் தொடர்ந்து இருக்க வேண்டும் – துரை வைகோ தலைமையில் தமிழக அமைச்சர்களிடம் கோரிக்கை✍️ தூத்துக்குடி மதிமுக மாவட்ட செயலாளர் R.S.ரமெஷ் அவர்களின் வேண்டுகோள்✍️?விண்மீன் நியூஸ்?
இளையரசனேந்தல் குறு வட்டத்தில் உள்ள 12 வருவாய் கிராமங்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் தொடர்ந்து இருக்க வேண்டும் – துரை வைகோ தலைமையில் தமிழக அமைச்சர்களிடம் கோரிக்கை மனு…
மக்களின் கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இளையரசனேந்தல் குறு வட்டத்தில் உள்ள 12 வருவாய் கிராமங்களை நெல்லை மாவட்டத்திலிருந்து குறித்து தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்தார். இந்நிலையில் உள்ளாட்சி, மின்சாரம், தொடக்கக் கல்வி ஆகிய 3 துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள அனைத்து துறைகளையும் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்க வேண்டும், தொடர்ந்து 12 வருவாய் கிராமங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதாஜீவன் ஆகியோரை சந்தித்து மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ மற்றும் 12 ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர்..