உலக செய்திகள்மருத்துவம்

முதன்முதலாககொரோனா பயம்?-முதல் முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கொரோனா பயம்?-முதல் முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

advertisement by google

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உலகிலேயே மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதுவரையில் அமெரிக்காவில் 32.9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,70,000 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,37,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

advertisement by google

கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

advertisement by google

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முறை கூட மாஸ்க் அணியாமலே எல்லா இடங்களுக்கும் போய்வந்தார். அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் டொனால்ட் ட்ரம்ப் மாஸ்க் அணியவில்லை.

advertisement by google

இந்நிலையில், நேற்று முதல்முறையாக ட்ரம்ப் மாஸ்க் அணிந்து வந்துள்ளார். அவர் வாஷிங்டன் புறநகர் பகுதியில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்கு, காயமடைந்த ராணுவ வீரர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களை ட்ரம்ப் சந்தித்தார்.

advertisement by google

இந்த பயணத்தின்போது டொனால்ட் ட்ரம்ப் மாஸ்க் அணிந்துவந்தார். மருத்துவமனைக்கு புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “மருத்துவமனைக்கு செல்லும்போது முக்கியமாக மாஸ்க் அணிவது அவசியம் என கருதுகிறேன்” என்று கூறினார்.

advertisement by google

எனினும், ராணுவ மருத்துவமனையை விட்டு ஹெலிகாப்டரில் புறப்படும்போது மாஸ்கை கழற்றிவிட்டார். செய்தியாளர் சந்திப்பு, அதிகாரிகளுடனான கூட்டம், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பொது நிகழ்ச்சிகள் என அனைத்திலும் அதிபர் ட்ரம்ப் மாஸ்க் அணிவதே இல்லை. நாட்டின் அதிபரே மாஸ்க் அணியாமல் இருப்பது தவறான முன்னுதாரணமாக அமையும் என ட்ரம்ப்பை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button