தன்னலம் பாராமல் களத்தில் இறங்கிய காவல் ஆய்வாளர் அம்பேத்கார்?பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் இருந்த சடலம் மீட்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தன்னலம் பாராமல் களத்தில் இறங்கிய காவல் ஆய்வாளர் – பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் இருந்த சடலம் மீட்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாதாள சாக்கடையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின்பேரில் உடனடியாக காவல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாபுபிரசாத் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று பார்த்ததில் பாதாள சாக்கடை பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டனர். சடலத்தை கண்டு பொதுமக்கள் அச்சபட கூடாது என்பதால் தானாக முன் வந்த பண்ருட்டி காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கார் அவர்கள் சடலத்தில் கயிறு கட்டி காவலர்கள் உதவியுடன் மேலே தூக்கி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மருத்துவ உதவியாளர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வரும்வரை காத்திருக்காமல் ஆய்வாளர் அவர்களின் துணிகர செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.