பிரியானி வாங்கிதராததால் கணவன் மீது கடும் கோவம்?தீ வைத்து தற்கொலைசெய்து கொண்ட மனைவி? சாகும் போது மனம்திருந்தி வேதனை ?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
கணவன் பிரியாணி வாங்கித் தரவில்லை என்ற கோபத்தில் மனைவி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன்-சௌமியா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் மனோகரனிடம் பணம் கொடுத்து பிரியாணி வாங்கி வருமாறு கூறியுள்ளார். மனோகரனின் மனைவி சௌமியா, தனக்கும் பிரியாணி வேண்டும் என்று அடம் பிடிக்கவே, தன்னிடம் பணம் இல்லாததால் பிரியாணி வாங்க முடியாது என்று மனோகரன் அவரை சமாதானப் படுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சௌமியா, உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சௌமியாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் அவசரப்பட்டு விட்டேன் என்று செளமியா கூறியதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.