கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்தில் 76 பேர் தனிமைப்படுத்தி தீவிர கண்கானிப்பு? முழுவிவரம்-விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி, கயத்தாறில் 76 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 76 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் 36 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினர். மேலும், அவர்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குஜராத் மற்றும் புனேவில் இருந்து வந்த 10 பேரை கோவில்பட்டி அருகேயுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 10 பேரின் மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஆய்வில், சென்னை, மகாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 30 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினர். மேலும், அவர்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.