இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

இந்தியஎல்லையில், பூட்டானும் சேட்டை? அஸ்ஸாம் கிராமங்களுக்கான பாசன நீரை நிறுத்தி அட்டூழியம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

எல்லையில் பூட்டானும் சேட்டை… அஸ்ஸாம் கிராமங்களுக்கான பாசன நீரை நிறுத்தி அட்டூழியம்

advertisement by google

குவஹாத்தி: அண்டை நாடான நேபாளத்தைத் தொடர்ந்து பூட்டானும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கி உள்ளது. அஸ்ஸாம் கிராமங்களுக்கான பாசன நீரை பூட்டான் நிறுத்தி இருப்பதால் சர்ச்சை வெடித்துள்ளது.

advertisement by google

இந்திய பகுதிகள் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது நேபாளம். இது தொடர்பான மேப் ஒன்றுக்கும் நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

advertisement by google

சீனாவின் தூண்டுதலால்தான் நேபாளம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதனால் நேபாளம் மீது கடும் அதிருப்தியை இந்தியா வெளிப்படுத்தி இருக்கிறது.

advertisement by google

இந்நிலையில் இந்தியாவையே பாதுகாப்பு உட்பட அத்தனைக்கும் சார்ந்திருக்கும் பூட்டானும் தொல்லை கொடுக்க தொடங்கி இருக்கிறது. அஸ்ஸாம் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள் பாசன வசதி பெறக் கூட்டிய நீரை பூட்டான் நிறுத்தி இருக்கிறது. 1953-ம் ஆண்டு முதல் இந்த பாசன நீரை இந்திய விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

advertisement by google

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இது மேற்கொள்ளப்பட்டதாகவே பூட்டான் தரப்பு கூறப்படுகிறது. ஆனாலும் பூட்டானிலும் சீனா சார்பு முழக்கங்கள் அவ்வப்போது எழுவது உண்டு. இதனால் பூட்டானும் சீனாவின் பிடியில் சிக்கிக் கொண்டு இந்தியாவுக்கு குடைச்சல் தருகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button