இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

திருப்பதி இ-பாஸ்க்கு ரூ2500 சிக்கிய இளைஞர்கள், திருவள்ளூர் கலேக்டர் அலுலகத்தில் அதிர்ச்சி?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

திருப்பதி இ-பாஸுக்கு ரூ.2,500; சிக்கிய இளைஞர்கள்!’ – திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிர்ச்சி

advertisement by google

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்துக்குச் செல்ல இ – பாஸ் பெற வேண்டும். ஆன் – லைன் மூலம் இ – பாஸ்களைப் பெறும் வசதியுள்ளது. மருத்துவம், திருமணம், இறப்பு ஆகிய காரணங்களுக்கு உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், பல தடவை விண்ணப்பித்தும் இ – பாஸ் கிடைப்பதில்லை என்ற குற்றசாட்டுக்களை பொதுமக்கள் முன்வைத்துவருகின்றனர்.

advertisement by google

இந்த நிலையில் இ – பாஸ்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் விற்கப்படுவதாக திருவள்ளூர் காவல் நிலையத்தில் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் புகாரளித்தார். அவர் அளித்த புகாரில், `நான், டிரைவராக பணியாற்றி வருகிறேன். திருப்பதி செல்ல இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.

advertisement by google

அப்போதுதான் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றும் ஜெகதீஷ், தினேஷ் ஆகியோர் இ- பாஸ்களை பெற்றுக்கொடுக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்களைச் சந்தித்து திருப்பதி செல்ல இ- பாஸ் வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர்கள் 2,500 ரூபாய் கேட்டனர். உடனே அந்தப் பணத்தை அவர்களிடம் கொடுத்தேன்

advertisement by google

ஆனால், இ-பாஸுக்கு மேலும் 2,500 ரூபாய் வேண்டும் என தினேஷ், ஜெகதீஷ் ஆகியோர் போனில் கேட்டனர். எனவே சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிந்து, கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு, ஜெகதீஷ், தினேஷ் ஆகியோர் பணம் வாங்கிக் கொண்டு இ- பாஸ் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. அதனால் அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

advertisement by google

தினேஷ், ஜெகதீஷ் ஆகியோர் சென்னை பட்டரைவாக்கத்தில் ஸ்டூடியோ நடத்திவருவதோடு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவருகின்றனர். பணம் கொடுத்து இ – பாஸ் பெற பொதுமக்கள் முயல வேண்டாம் என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான ஜெகதீஷ், தினேஷ் யாருக்கெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு இ-பாஸ் கொடுத்தார்கள் என்றும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

advertisement by google

இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வந்த ஜெகதீஷ், தினேஷ் ஆகிய இருவர் மீது இ-பாஸுக்கு பணம் வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைய தளம் வழியாக இ-பாஸ் பெற்று அதை விற்றுவந்துள்ளனர். இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரணை நடந்துவருகிறது. மேலும் பொதுமக்கள், சரியான காரணத்தைக் குறிப்பிட்டு இ – பாஸுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இடைத்தரகர்கள் மூலம் இ – பாஸ் பெற யாரும் முயல வேண்டாம்” என்றார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button