கொடைக்கானலில் ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா தோட்டத்தை தீயிட்டு அழித்த காவல்துறையினர் ?முழு விவரம் – விண்மீன் நியூஸ்
ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா தோட்டத்தை தீயிட்டு அழித்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
20.05.2020 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் சாலை மலைப்பகுதியில் கஞ்சா தோட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜசேகர் அவர்கள், சார்பு ஆய்வாளர் திரு.காதர்மைதீன், வன ஆய்வாளர் திரு.பழனிவேல் மற்றும் திரு.ஆனந்தராஜ் மற்றும் காவலர்கள், வனக்காவலர்கள் சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது தூண் பாறை பின்புறம் 5 கிலோ மீட்டர் கீழ் வன பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டு இருந்த 9 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை பிடுங்கி அவற்றை அங்கேயே தீயிட்டு அளித்தார்கள். இதில் சம்பந்தப்பட்ட கொடைக்கானல் வில்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (50) மற்றும் வத்தலக்குண்டைச் சேர்ந்த பிரசாந்த் (எ) பாண்டி (31) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்