தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி அருகே போலீசார் ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறி தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி அருகே போலீசார் ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறி தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

advertisement by google

✍தூத்துக்குடி அருகே போலீசார் ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறி தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ய முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாரை கண்டித்து காவல்நிலையம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது45). இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று சங்கரம்மாளின் ஆடு ஒன்றை நாய் கடித்ததாக கூறி மற்றொரு தரப்பினருக்கும் இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 29பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

advertisement by google

✍இந்நிலையில், அந்த பிரட்சனை குறித்து விசாரனை நடத்துவதற்காக செய்துங்கநல்லூர் போலீசார் இன்று காலை 6 மணிக்கு சங்கரம்மாள் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் சங்கரம்மாளையும், அவரது மகள் ஐஸ்வர்யாவையும் விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. மேலும், காவல் துறை அதிகாரிகள் தாய் – மகளை ஆபாசமாக பேசி, தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த சங்கரம்மாள் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தனது மகளையும் குடிக்க வைத்துள்ளாராம். பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏறிய தாய், மகள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

advertisement by google

✍இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு எஸ்பி ஜெயக்குமார் , டிஎஸ்பி சுரேஷ்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

advertisement by google

✍ஏற்கனவே சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறை மீதுள்ள குற்றச்சாட்டு முடிவுக்கு வராத நிலையில், செய்துங்கநல்லூரில் போலீசாரைக் கண்டித்து தாய், மகள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button