அவசரபொருட்கள் வாகனங்களுக்கு உடனே எப்சி வழங்க வேண்டும்? போக்குவரத்து உத்தரவு?
அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு உடனே ‘எப்சி’ வழங்க வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு
அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு உடனே ‘எப்சி’ (தகுதிச்சான்று) வழங்க வேண்டும் என தமிழக ேபாக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவிட்-19 காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநேரத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு உடனடியாக எப்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது.
அதாவது தண்ணீர் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், எல்பிஜி, ஆயில் டேங்கர்ஸ், மின்வாரிய வாகனங்கள், உள்ளாட்சித்துறை வாகனங்கள், (டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள்), ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை வாகனங்களை இயக்குவோரிடமிருந்து இந்த கோரிக்கைகள் வருகிறது.
எனவே அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வுசெய்யும் போது, தாமதமின்றி தகுதிச்சான்றை வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அதன்படி செயல்படுகிறோம்.