கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி தீடீர் உண்ணாவிரதம்? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி தீடீர் உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 பேரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி தூக்கிலிட வேண்டும், பேரறிவாளனுக்கு வழங்;கப்பட்டுள்ள பரோலை ரத்து செய்வதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும், ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு அரசு 5 கோடிரூபாய் நிதிஉதவி அளிப்பது மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவருமான வழக்கறிஞர் அய்யலுச்சாமி தனது கண்ணில் கருப்புதுணி கட்டி கொண்டு, கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக்கொண்டு தனது கோரிக்கை மனுவினை காந்தி மண்டபத்தில் உள்ள காந்திசிலையிடம் மனு அளித்தார். தொடர்ந்து தனது கோரிக்கைகளை வலியுறுத்தியவாறு பயணியர் விடுதி முன்பு தீடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் கிடைத்தும் மேற்கு காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது