டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடவேண்டியும்,சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக்கொன்ற முருகன் , கலிய பெருமாளை தூக்கிலிட வலியுறுத்தியும் போராட்டம் அறிவித்த நந்தினி , ஆனந்தன் காலையில் கைது செய்து,இரவு7மணிக்கு விடுதலை?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
நந்தினி மற்றும் ஆனந்தன் கைது
காலை 10 மணிக்கு உயர்நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நந்தினி மற்றும் அப்பா ஆனந்தனை கைது செய்வதற்காக காலை 5 மணிக்கே காவல்துறையினர் வீட்டுவாசலுக்கு வந்து வீட்டை விட்டு வெளியே வரும்படி அறிவிப்பு செய்தனர்.
போராட வெளியே சென்ற இருவரையும் 9.30 மணிக்கு வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர்.
சிறுமி ஜெயஸ்ரீ-ஐ குடிபோதையில் எரித்து கொன்ற அதிமுக நிர்வாகிகள் முருகன்,கலியபெருமாளை தூக்கிலிடு!
மூடிய டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்காதே!
சாராயத்தைக் கொடுத்து மக்களைப் படுகொலை செய்யாதே!
வீட்டுக்கே கொண்டு வந்து சாராயம் விற்கும் ஆன்லைன் மது விற்கும் திட்டத்தைக் கைவிடு! என்று முழக்கத்துடன் காவல் நிலையம் காவல்துறையினருடன் சென்றனர்.
பின்பு சரியாக இரவு 7 மணிக்கு நந்தினி அவருடைய அப்பா ஆனந்தனும் மதுரை K.புதூர் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சிறுமி ஜெயஸ்ரீ-க்கு நடந்த அநீதிக்கு எதிராகவும், டாஸ்மாக்குக்கு எதிராகவும் எங்களின் கடுமையான எதிர்ப்பை உறுதியுடன் வெளிப்படுத்தி சென்றனர்
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்