தேசியநூலக வாரவிழாவில் புத்தூர் கிளை நூலகத்தில் புதிய உறுப்பினரான பள்ளி மாணவர்கள்?
தேசிய நூலக வார விழாவில் புத்தூர் கிளை நூலகத்தில் புதிய உறுப்பினரான பள்ளி மாணவர்கள்
தேசிய நூலக வார தொடக்க விழா புத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்றது. தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். புத்தூர் கிளை நூலக நூலகர் தேவகி பேசுகையில்,
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் நன்கு படித்து சிறந்த குடிமகனாக திகழ வேண்டும். அதற்கு சிறப்பாக படிக்க வேண்டும். பொது அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். நூலகத்தில் பள்ளி, மாணவ மாணவிகள் தேவையான நூல்களை எடுத்து படிக்கலாம். நூல்களை வீட்டிற்கு கொண்டு சென்றும் படிக்கலாம். அதற்கு நூலகத்தில் உறுப்பினராக வேண்டும்.
கிளை நூலகத்தில்
உறுப்பினராக சேர்வதற்கு ஆதார் அட்டை நகல் வேண்டும்.
ஒரு புத்தகத்திற்கு காப்புத் தொகை ரூ.20/- ம் ஆண்டு சந்தா
ரூ.10/- ம் செலுத்த வேண்டும்.
எடுத்து செல்லும் நூல்கள் தவணை நாள் 14 நாட்களுக்குள் நூலகத்தில் திரும்ப வழங்க வேண்டும் என விளக்கினார். இதனை தொடர்ந்து தென்னூர் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவிகள் நூலகத்தில் உறுப்பினரானார்கள்.