t

இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கும் தமிழகத்தை புரட்டிப்போடும் கைது சம்பவங்கள்..✍️ராஜகோபாலன் முதல் பப்ஜி மதன் வரை…✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தமிழகத்தை புரட்டிப்போடும் கைது சம்பவங்கள்..! ராஜகோபாலன் முதல் பப்ஜி மதன் வரை…

advertisement by google

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் பல்வேறு சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவே பார்க்கப்படுகிறது. அதிலும், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததும், நீண்ட காலமாக நடந்து வருவதுமான பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார்கள் காவல் நிலையங்களில் குவிந்து வருகின்றன. அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் போலீசாரின் வேகம் பாராட்டுகளை பெற்று வருகிறது. தமிழக போலீசாருக்கு அதிரடி

advertisement by google

ஆபரேஷன்கள் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், அதில் சிக்குபவர்களின் குற்ற செயல்கள் விசித்திரமாக உள்ளது.

advertisement by google

ராஜகோபாலன்

advertisement by google

அந்த வகையில் சென்னை கே.கே. நகரில் இயங்கி வரும் பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மீது சில மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காலையில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியபோது வெளிப்பட்ட உண்மைகள் காது கொடுத்து கேட்கமுடியாதவை. அவர் குறி வைக்கும் மாணவியை பார்த்து நீ இந்த உடையில் அழகா இருக்கிறாய் என்று கூறுவது ராஜகோபாலானனின் வழக்கம். இப்படி குறி வைக்கப்படும் மாணவியை ஒய்வு அறைக்கு அழைத்து செல்லும் ராஜகோபாலன் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், மாணவிகள் மீது கை வைத்து பாலுணர்வை தூண்டி சீரழித்துள்ளார்.

advertisement by google

கராத்தே கெபிராஜ்

advertisement by google

சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சிப் பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ் என்பவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இப்போது புகார் அளிக்கப்பட்டு அவரை போக்ஸோ வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

advertisement by google

கிஷோர் கே சாமி

தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் , திமுக தலைவர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டதான புகாரில் அரசியல் விமர்சகரும், பாஜக ஆதரவாளருமான கிஷோர் கே சாமியை சென்னை போலீசார் கைது செய்தனர். மேலும், கிஷோர் கே சாமி மீது பெண் ஊடகவியலாளர்களை சமூக ஊடகங்களில் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகாரை அடுத்து அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, அவரை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடந்து அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பாலியல் தொல்லைக்கு ரகசிய சொகுசு அறை: சிவசங்கர் பள்ளியில் திடுக் தகவல்கள்!

பப்ஜி மதன்

யூடியூபில் ஆபாசமாக பேசி தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை விளையாடி வந்த புகாரில் சேலத்தை சேர்ந்த பப்ஜி மதன் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்த நிலையில் தர்மபுரியில் வைத்து அவரை கைது செய்தனர். முன்னதாக மதனின் அட்மினாக செயல்பட்டதற்கு அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button