இந்தியா

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி துவக்கிய போராட்டம், ஆறு மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, வரும் 26ம் தேதி, கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும்’ என விவசாயிகள் அறிவிப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

வரும் 26-ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் – விவசாயிகள் அறிவிப்பு

advertisement by google

புதுடெல்லி,

advertisement by google

‘மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி துவக்கிய போராட்டம் ஆறு மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, வரும் 26ம் தேதி, கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும்’ என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

advertisement by google

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள், 2020 நவ., 26ல் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டத்தை துவக்கினர்.

advertisement by google

இந்நிலையில் விவசாய சங்கங்களின் தலைமை அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் பல்பீர் சிங் ரஜவல் கூறியதாவது:

advertisement by google

வரும் 26ம் தேதியுடன் எங்கள் போராட்டம் துவங்கி ஆறு மாதங்கள் நிறைவடைகிறது. இதை குறிக்கும் வகையிலும், பிரதமராக மோடி பதவியேற்று அன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிவடைவதையொட்டியும், 26ம் தேதி, கறுப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று, நாடு முழுதும் உள்ள மக்கள், தங்கள் வீடு, கடை, வாகனங்களில் கறுப்பு கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறாத வரை எங்களது போராட்டம் தொடரும்.

advertisement by google

இவ்வாறு அவர் கூறினார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button