புல்புதரில் மறைந்திருந்து செயினை பறித்த திருடன்? மூதாட்டி அலறல்? ராமநாதபுரத்தில் பரபரப்பு?
ராமநாதபுரம் தேவிபட்டிணம் அருகேயுள்ளது அத்தியூத்து கிராமம். இந்த ஊரைச் சோ்ந்த பஷீா் என்பவரது மனைவி மீரான்பீவி (55). இவா் வெள்ளிக்கிழமை பகலில் தனது தோட்டத்தில் மாடுகளுக்கு புல் அறுத்துக்கொண்டிருந்துள்ளாா். அப்போது புதரில் சட்டை, பேண்ட் அணிந்த மா்மநபா் ஒருவா் மறைந்து மறைந்து அவரை நெருங்கியுள்ளாா்.
மா்மநபா் வருவதை அறிந்த மீரான்பீவி சத்தமிட்டபடி அவரை கேள்விகேட்டுள்ளாா். உடனே மா்மநபா் தான் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை மூதாட்டி முகத்தில் தூவி, வயல் சகதியில் தள்ளிவிட்டு, அவா் அணிந்திருந்த ஐந்தரைப் பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டாா்.
மூதாட்டி சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து அவரை மீட்டு ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.
இதுகுறித்து தேவிபட்டிணம் காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா். அந்தப் பகுதியில் பதிவாகியிருந்த கண்காணிப்புக் காமிராக் காட்சிகளை வைத்து சந்தேக நபரைப் பிடித்தும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
எட்டிவயலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவா் மா்ம நபரால் வயல் வெளியில் கொல்லப்பட்டாா். அதில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் அதே முறையில் வயல்வெளியில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்புச் சம்பவம் நடந்திருப்பது காவல்துறையினரிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.