t

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணி முடிந்து புறப்பட்ட பெண்✍️ எமனாக வந்த போதை ஆசாமி✍️ சென்னையில் சோகம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பணி முடிந்து புறப்பட்ட பெண்… எமனாக வந்த போதை ஆசாமி… சென்னையில் சோகம்

advertisement by google

சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (12). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பணி முடிந்த பிறகு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த யமுனா பர்ணபி சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது, ஈவேரா சாலையில் இருந்து வேகமாக வந்துகொண்டிருந்த கார் மோதியதில் யமுனா தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானார்.

advertisement by google

உடனே அவரை மீட்ட பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக யமுனாவின் உடல்நிலை மோசமானது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக யமுனா ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

advertisement by google

ஆனால், அங்கு அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனிடையே விபத்து ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற கார் ஓட்டுனரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

advertisement by google

கல்யாணம் பல, குழந்தை… ப்ளே கேர்ளான பெண் போலீஸ் கைது..!

advertisement by google

விசாரணையில் அவர் பெயர் அப்துல் கவுஹிம் என்பதும் அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து வழக்கு அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

advertisement by google

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவ பணியாளர் குடிபோதை வாகன ஓட்டியினால் மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கில் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் நன்றாக குடித்துவிட்டு காரை இயக்கி வந்த நபரை போலீசார் ஏன் தடுக்கவில்லை? மதுக்கடைகள் மூடப்பட்ட சூழலில் அவருக்கு எப்படி மது கிடைத்திருக்கும்? உள்ளிட்ட கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button