தமிழ்நாடு மாவட்டம்

கயத்தாரில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்துக்கொன்ற, மாமனார் ,மச்சினமார்கள்

advertisement by google

கயத்தாறு:தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கீழ ஈரால் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் பிரபாகரன் (வயது 28). 108 ஆம்புலன்ஸ் டிரைவர்.இவருக்கும் கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த தாவீது என்ற குருசாமி மகள் லாவண்யாவுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு லாவண்யா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று முன்தினம் கயத்தாறில் கோவில் கொடை விழா நடைபெற்றுள்ளது.இதற்காக பிரபாகரன் மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.இதனால் அவருக்கும் அவரது மாமனார் குரு சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த குருசாமி மற்றும் அவரது மகன்கள் மாரியப்பன்(30), சோலையப்பன்(28) ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரபாகரனை சரமாரியாக அடித்து தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிரபாகரன் உயிரிழந்தார்.இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ் பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோர் குருசாமி மற்றும் அவரது மகன்கள் மாரியப்பன், சோலையப்பன் ஆகியோரை கைது செய்த னர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button