ஏழை விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்துசெய்துவிட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் கொடுக்க மத்தியரசு திட்டம்? தமிழ்விவசாயிகள்சங்க தலைவர் O.A. நாராயணசாமி பேட்டி?முழு விவரம் – விண்மீன்நியூஸ்
விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்து கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் கொடுக்க மத்திய மாநில அரசு திட்டம் வகுத்து விட்டது , 60 உயிர்களை துப்பாக்கி சூட்டிற்கு பலி கொடுத்து அந்த விவசாயப் போராளிகள் சிந்திய ரத்தத்திற்கு கிடைத்தது தான் இந்த இலவச மின்சாரம்,விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்து கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் கொடுக்க மத்திய அரசும்,மாநில அரசும் திட்டம் வகுத்துவிட்டது என்று தமிழ் விவசாயிகள் சங்கம்,தலைவர் ,OA. நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது….. தமிழக விவசாயிகளின் எதிர்காலம் இருள் சூழ்ந்து விடும் அபாயம் கடுமையாக உழைத்து விவசாயம் செய்துவரும் இந்தநிலையில் உழைப்புக்கேற்ற ஊதியமும் இல்லை உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு நியாயமான விலை இல்லை விவசாயிகள் என்றும் கடன் சுமையால் தான் வாடி கொண்டிருக்கின்றான்
இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை பிடிங்கி கார்ப்பரேட் முதலாளிகள் கைக்கு கொடுக்க மத்திய மாநில அரசுகள் திட்டம் வகுத்து விட்டது