சிரிக்க சிந்திக்கபயனுள்ள தகவல்

கதைகளம் :திருநெல்வேலியிலிருந்து சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில்பட்டியில் ஒரு பாட்டி மூட்டையுடன் ஏறினாள்?முழுகதை – விண்மீன் நியூஸ்

advertisement by google

திருநெல்வேலியில் இருந்து
சென்னை செல்லும்
“நெல்லை எக்ஸ்பிரஸ்” ரயிலில்
கோவில்பட்டியில்,
ஒரு பாட்டி
மூட்டையுடன் ஏறினார்.

advertisement by google

??? ரயில்பெட்டியில்
உட்கார்ந்திருந்த இளைஞனிடம்
சொன்னாள்
பேராண்டி
நான் நாளை காலை
7 மணிக்கு
விழுப்புரத்தில் கல்யாணத்தில்
கலந்து கொள்வதற்காக
செல்கிறேன்.
அதிகாலை 3.00 மணிக்கு
இந்த ரயில்
விழுப்புரத்தை சென்றடையுமாம்.

advertisement by google

நான் தூங்கி விடுவேன்
என்னை விழுப்புரத்தில்
3.00 மணிக்கு எழுப்பி
இறக்கி விட்டு விடு

advertisement by google

நான்
எழுந்திருக்கவில்லை
என்றாலும்
குண்டுக்கட்டாக தூக்கி
பிளாட்பாரத்தில்
படுக்க வைத்து விடு.

advertisement by google

நான்
விடிந்ததும்
ஆட்டோ பிடித்து
கல்யாண மண்டபத்திற்கு
சென்று விடுவேன்
சிரமத்திற்கு மன்னித்துக் கொள்.

advertisement by google

இந்த உதவியை மட்டும்
எனக்காக செய்து விடு
என்றாள்

advertisement by google

அவன் சொன்னான்
பாட்டி
இதென்ன உதவி
கண்டிப்பாக
நான் உங்களை
விழுப்புரத்தில்
இறக்கி விட்டு விடுகிறேன்
அதற்காக
உதவி என்று
பெரிய, பெரிய வார்த்தையெல்லாம்
சொல்லாதீர்கள்.

advertisement by google

நீங்கள்
நிம்மதியாக தூங்குங்கள்
என்றான்

பாட்டியும்
அவனை நம்பி
நன்றாகத் தூங்கி விட்டாள்

காலை ஏழு மணிக்கு
எக்மோர் ஸ்டேசன் வந்ததும்
அந்த பாட்டி
குய்யோ முறையோ
என்று கத்தி
அந்த இளைஞனை
திட்டுகிறாள்
நீ நல்லா இருப்பியா
நாசமா போயிருவ. உன்னை நம்பி தானடா
நான் தூங்கி விட்டேன்
முடியாது என்று
முதலிலேயே சொல்லியிருந்தால்
நான்
தூங்காமல் இருந்திருப்பேன்
அல்லது
வேறு யாரிடமாவது
சொல்லி இருப்பேனே
இப்போதே
மணி ஏழாகி விட்டதே
இனி நான்
எப்படி பஸ் பிடித்து
எத்தனை மணிக்கு
விழுப்புரத்துக்குப் போவேன்
முகூர்த்தம் முடிந்து விடுமே
என்று
திட்டிக் கொண்டே இருந்தாள்

பக்கத்திலிருந்தவர்கள்
விசயத்தைக் கேள்விப் பட்டு
அவர்களது பங்குக்கு
அவர்களும்
அவனை திட்டி
சாத்து சாத்து என்று
சாத்தினார்கள்

அவன்
இந்த திட்டையும் அடியையும்
பொருட்படுத்தாமல்
தீவிரமாக
யோசித்துக் கொண்டிருந்தான்

எல்லோரும் கேட்டார்கள்
ஏண்டா
பாட்டியும் நாங்களும்
உன்னை
இந்த திட்டியும்
இப்படி அடித்தும்
கொண்டிருக்கிறோம்

நீ
எதையும் பொருட்படுத்தாமல்
அப்படி
என்னத்தையடா
யோசித்துக் கொண்டிருக்கிறாய்
என்று கேட்டார்கள்

அதற்கு
அவன் சொன்னான்

இந்தப் பாட்டியே
என்னை
இப்படித் திட்டுகிறதே
இந்தப் பாட்டி என்று நினைத்து
இன்னொரு பாட்டியை
சொல்லச் சொல்ல கேட்காமல்
அதிகாலை 3.00 மணிக்கு
தர தரவென்று இழுத்து
விழுப்புரம் பிளாட்பாரத்தில்
படுக்க வைத்து விட்டு வந்தேனே
அந்த பாட்டி
எப்படி திட்டும் என்று
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
என்றான்… ,,, !!! ??? √√√

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button