கோவில்பட்டி புனிதசெல்வமாதாகோவில் தேர்பவனி? புதுக்கிராமத்தில் கோலாகலம்
கோவில்பட்டி புதுக்கிராமம் புனித பரிசுத்த செல்வ மாதா ஆலய திருவிழா தேர்ப்பவனி
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் புனித பரிசுத்த செல்வ மாதா தேவாலயத்தின் திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது. இதை முன்னிட்டு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் அடிகளார், பாளை செட்டிகுளம் பங்குத்தந்தை அந்தோணிராஜ் அடிகளார் மாதாங் கோவில்பட்டி பங்குத்தந்தை காந்தி சவரிமுத்து அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது புதுகிராமம் ,கடலையூர் மெயின் ரோடு, பங்களா தெரு வழியாக தேர்ப்பவனி சென்று ஆலயத்தில் நிறைவு பெற்றது. இதில் திரளான கிறிஸ்தவ பெரு மக்கள் கலந்து கொண்டனர்