சிவன் கோவிலைகட்டியது நான்தான் நித்யானந்தா
♦நித்தியானந்தாவின் அடுத்த அட்ராசிட்டி..!
?சர்ச்சைகள் நாயகன்., லீலைகள் மன்னன்., வைரல் விடியோவிற்கும் – அர்த்தங்கள் நிறைந்த ஆழமான… ஆழமான பேச்சிற்கு சொந்தக்காரன் என்ற பெருமையையும்., தியானம் முடியும் வரையில் சூரியனையே காத்திருக்க வைத்த நித்தியானந்த சுவாமிகள் அவ்வப்போது தனது இணையப்பக்கத்தில் விடியோவை வெளியிட்டு., பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்குவது வழக்கம்.
?அந்த வகையில்., தற்போது வெளியான வீடியோ காட்சியில் அருள் புரிந்த நமது நித்தியானந்த சுவாமிகள் தமிழ்நாட்டில் இருக்கும் சேலம் மேட்டூர் அணையில் இருக்கும் பழமையான சிவன் ஆலயத்தை தான் கட்டியதாகவும்., அந்த கோவிலில் உள்ள மூல லிங்கம் தன்னிடம் இருதாகவும் கூறியுள்ளார்.
?மேலும்., இந்த கோவில் கட்டப்பட்டது என்னுடைய முன் ஜென்மத்தில் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவில் தனது பக்தர்களுக்கு பல விதமான ஆழ்ந்த ஆலோசனை வழங்கிய நிலையில்., பரவசத்தின் உச்சத்திற்கு சென்ற நித்தியானந்தா சுவாமிகள் தனது விடியோவை முடித்து கொண்டார்.
?இந்த வீடியோ காட்சிகள் இணைய தளங்களில் பெரும் வைரலாகிய நிலையில்., இந்த விடியோவை கண்ட நெட்டிசன்களும் சிலையை மீட்க காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
?மேலும்., சிலை கடத்தல் காவல் துறையினரும் தாமாக முன்வந்து., சுவாமியின் ஆலயத்தில் சோதனை மேற்கொண்டு மூல லிங்கத்தை மீட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
?மேலும்., அண்மையில் வெளியான குருநாதர் புகைக்க., அருகில் இருக்கும் நாய் புகை விடும் என்று கூறியதை கேட்ட நித்தியானந்தாவின் உயிர் சீடர்கள் பெரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாகியது வைரலாகி வருகிறது.