உறவினர்கள் உட்பட வெளியாட்கள்யாரையும் வீட்டிற்கு அனுமதிக்க வேண்டாம்? கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்? பிரதமர் மோடி
யாருக்கும் அனுமதி இல்லை..!
உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்
என பிரதமர் மோடி அறிவிப்பு
மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் அழிவை சந்திக்க நேரிடும்
பொருளாதாரத்தை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம்
முழு அடைப்பை கடைபிடிக்காவிட்டால் வைரஸ் தீயை போல நாடு முழுவதும் பரவக்கூடும்:
பிரதமர் மோடி ஒரே ஒரு நபர் மூலமாக இந்த வைரஸ் நூற்றுக்கணக்கானோருக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது : மோடி
நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் முடங்கி இருப்பது அவசியம் என்பது நிபுணர்களின் கருத்து உலக சுகாதார அமைப்பு கூறுகிறது என்றால்
ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் 10 நாட்களில் 100 பேருக்கு இந்த நோய் பரவி விடும் என எச்சரித்துள்ளனர்,காட்டு தீயைப் போன்று இந்த வைரஸ் பரவும்
நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும்
ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை
ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி
அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு – பிரதமர் மோடி அறிவிப்பு
“மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது”
நோய்த் தொற்றை தடுக்க இது ஒன்றே வழி
அடுத்த சில நாட்களுக்கு வெளியே வருவதை முற்றிலும் தவிருங்கள்
வீட்டுக்குள்ளேயே இருங்கள். வீட்டுக்குள்ளேயே தனித்து இருங்கள்.
நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டுக் கொள்ளுங்கள்
நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால். கொரோனா உங்களை தாக்கக் கூடும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது
நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்
- பிரதமர் மோடி
#Covid19India #PMModiOnCorona