கார் டயர் வெடித்து தனியார் பேருந்து மோதல்?7 பேர் உயிரிழப்பு உளுந்தூர் பேட்டையில் பரிதாபம்?
உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் கிராமத்தை சேர்ந்த மல்லிகா, மேல் மருத்துவத்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் புறவழிச்சலையில் சென்றபோது காரின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், புறவழிச்சாலையின் தடுப்பை மீறி, எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துகுள்ளானது.
இதில் காரில் பயணித்த மல்லிகா, நிஷா மற்றும் கார் ஓட்டுனர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த உளுந்தூர் பேட்டை தீயணைப்புத் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.