இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

செல்ஃபி எடுக்க முயன்ற4பேர் அணையில் மூழ்கிபலி கிரிஷ்ணகிரி மாவட்டத்தில்

advertisement by google

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே செல்ஃபி எடுக்க முயன்ற 4 பேர் அணையில் மூழ்கி உயிரிழந்தனர்.

advertisement by google

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், கனிதா, சினேகா, நிவேதா ஆகிய 4 பேர் ஆயுதப் பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலை ஊத்தங்கரையில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்தனர்.

advertisement by google

இதையடுத்து திரையரங்கு விட்டு வெளியே வந்த அவர்கள், அருகில் உள்ள பாம்பாறு அணையை சுற்றி பார்க்க சென்றனர். அணையில் அதிக அளவில் தண்ணீர் செல்வதை பார்த்த இவர்கள், அணையின் ஓரத்தில் நின்று செல்பி எடுக்க முற்பட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக இவர்கள் நான்கு பேரும் அணைக்குள் தவறி விழுந்தனர்.

advertisement by google

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஊத்தங்கரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு நான்கு பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

advertisement by google

இதையடுத்து நான்கு பேரின் உடலையும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

advertisement by google

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 16 நாட்களில் 19 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button