கோவில்பட்டியில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி உடலில் தீபம் ஏற்றி விழிப்புணர்வு யோக செய்த 5வயது சிறுமி?
அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி உடலில் தீபம் ஏற்றி விழிப்புணர்வு யோகா செய்த 5வயது சிறுமி
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் கார்த்திகை தீபம் ஏற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் மற்றும் மைக்ரோபாய்ண்ட் தொழிற்பயிற்சி பயிற்சி பள்ளி இணைந்து, தேர்தலில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பள்ளி மாணவி ரவீணா(5) பத்திராசனத்தில் அமர்ந்து உடல் முழுவதும் அகல் விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சிக்கு மைக்ரோ பாய்ண்ட் தொழிற் பயிற்சி பள்ளி நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் தலைமை வகித்தார். தொழில் அதிபர் நடராஜன் முன்னிலை வகித்தார். சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் மாநில ஆலோசகர் ராஜகோபால் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் நிறுவனர் சுரேஷ்குமார் வாழ்த்தி பேசினார். ரம்யா நன்றி கூறினார்.