இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரலாறு

கூடுவிட்டு கூடுபாயும் கலை -திகில் வரலாறு திகில் பார்வை?

advertisement by google

விண்மீண்நியூஸ்:
கூடுவிட்டு கூடுபாயும் கலை…

advertisement by google

அந்தக் காலத்தில் கூடுவிட்டு கூடுபாயும் கலை என்பது இருந்ததாக நாம் அறிய முடிகின்றது. சித்தர் திருமூலரே இதற்கு சாட்சியாகவும் இருக்கின்றார். உண்மையாகவே உலகில் கூடுவிட்டு கூடு பாயும் என்ற ஒரு கலை இருந்ததா என்பது மனதின் கேள்வியாக உள்ளது. அப்படியானால் அது எந்த சமயத்தில் நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையாகவே அந்தக் கலையின் நோக்கம் என்னவாக இருக்கும். கண்டிப்பாக கூடுவிட்டு கூடுபாயும்கலை என்பது தீயநோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடியதாக அந்தக் காலத்தில் இருந்திருக்காது. கூடு விட்டு கூடு பாய்வது என்பது என்ன உண்மையில் ஆன்மாவானது ஒரு உடலை விட்டு இன்னொரு உடலில் பிரவேசிப்பதே கூடுவிட்டு கூடுபாயும் கலையாகும். இதை சித்தர்கள் அந்தக் காலத்தில் நன்மைக்காக பயன்படுத்தியதாக நாம் அறிய முடிகின்றது. இப்படி கூடுவிட்டுக் கூடு பாய்வதில் என்ன நன்மை இருக்கின்றது. மகான் ஒருவர் நீரின் மீது நடந்து வந்தபோது அதை பார்த்த முனிவர் அவரைப் பார்த்து கூறினார் 25 பைசா கொடுத்தாலே படகோட்டி அக்கரையிலிருந்து இக்கரைக்கு கூட்டி வந்து விடுவான் ஆக நீரின் மீது நடப்பதால் வெறும் 25 பைசா மதிப்பிற்கான ஒரு கலையையே கற்க முடிந்தது.இதனால் என்ன லாபம் கிடைத்தது. கூடுவிட்டுக் கூடுபாயும் கலையையும் அவ்வாறு தான் கணிக்க முடிகின்றது.ஆனால் உண்மையில் கூடு விட்டுக் கூடுபாயும் கலை என்பது என்ன? பரமாத்மா தந்தை ஈசன் ஆனவர் பூமிக்கு
வரும் பொழுது மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதே உண்மையிலும் உண்மையான கூடுவிட்டு கூடுபாயும் கலையாகும்.மேலும் அந்தக் கலையை உயிருடன் இருந்து இறந்து வாழும் கலைக்கு அதை நாம் ஒப்பிடலாம்.உலகின் இறுதி நிலையில் அனைத்து ஆன்மாக்களும் நலிவடைந்து இருக்கும்போது தர்மத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் பொழுது இறைவன் ஈசன் ஜோதி வடிவமாக உலகிற்கு வந்து கற்பிக்கும் கலையே கூடுவிட்டு கூடு பாயும் கலை. நலிவடைந்த ஆத்மாக்கள் என்னை நினைவு செய்வதால் ஆத்மாவில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி ஆத்மா உன்னதமான தூய்மையான நிலை அடைவதற்கு பெயர் தான் பழைய கூட்டிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு அதாவது பழைய உடலில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக ஆத்மா செய்யும் முயற்சி. எப்பொழுது தந்தை ஈசனின் நினைவில் ஆத்மா தூய்மையாகி விடுகின்றதோ அப்பொழுது பழைய சரீரத்தில் இருந்து வெளியேறிவிடும். பழைய சரீரத்தில் இருந்து வெளியேறும் ஆத்மா பிறகு தந்தை ஈசன் படைக்கும் புது உலகமான சனாதன தர்மத்தில் புதிய உடலை எடுக்கும்.பழைய சரீரத்தில் இருக்கும் வரை ஆன்மா இந்த உலகத்தில் உலகியலான நினைவுகளை விட்டு தந்தை ஈசனின் நினைவில் மூழ்கி இருப்பதே இருந்தும் இறந்த நிலை. தந்தை ஈசன் இருக்கும் பிரம்ம தத்துவத்தையும் பிரம்ம தத்துவத்தில் இருந்து தான் செல்லக்கூடிய உலகமான சனாதன தர்மத்தையும் நினைத்தவாரே அவருடைய அன்பில் மூழ்கி இருப்பவரே இந்த உலகத்தில் இருந்து விடுபட்டு தந்தை ஈசனின் நினைவில் மூழ்கி இருக்கின்றார்.ஆனால், அவர் இந்த பழைய உலகில் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார். ஆனால்,அவரது நினைவுகள் இந்த உலகத்தை சுற்றி இந்த உலகியலான பொருட்களை சுற்றி முற்றிலும் விடுபட்டு, தந்தை ஈசன் இருக்கும் இடத்தில் மூழ்கி இருக்கின்றது. இவை எதுவுமே நிலையானது அல்ல என்பதை அவரது புத்தி நிலையாக புரிந்திருக்கின்றது. இந்த உலகில் வாழும் வரை ஒரு பற்றற்ற நிலையில் எல்லோருடனும் அன்புடன் இருந்து தான் ஒரு விருந்தாளியாக இருக்கின்றோம் இந்த உலகை கடந்து நாம் செல்ல வேண்டும் என்பது அவரது புத்தியில் இருக்கின்றது. ஏனென்றால் இந்த உலகத்தில் பார்க்கக்கூடியது எல்லாமே நிலையானது அல்ல தர்மத்தின் உலகம் தந்தையினால் வரப்போகின்றது அந்த உலகம் தான் நிலையானது என்பதை புரிந்திருப்பார் .
இந்த துன்பகரமான பழைய நோய் உள்ள உடலை பழைய கர்ம கணக்கின்படி அனுபவிக்க வேண்டிய சுமைகளை தந்தை ஈசனின் நினைவில் முடித்துவிட்டு, புதிய உலகில் புதிய தெய்வீகமான உடலை எடுத்து அந்த உடலில் ஆனந்தமாக இருப்பதை எண்ணி மகிழ்ந்திருப்பார்.தன்னுடைய ஆன்மாவானது தந்தை ஈசனின் நினைவில் மிகவும் தூய்மையான நிலை அடைந்து பரப்பிரம்மத்தை சென்றடைந்து தந்தையின் ஈசனின் அருளால் சனாதன தர்மத்தில் வந்து புதிய உடலை எடுப்பதே உண்மையிலும் உண்மையான கூடுவிட்டு கூடு பாயும் கலையாகும். தந்தை பிரம்மாவும் இதே பயிற்சியை செய்தார்.தான் இந்த ஒரு பழைய கூட்டை விட்டு ஸ்ரீகிருஷ்ணர் என்கிற கூட்டில் தன் ஆத்மா சென்று பிரவேசமாகும் என்பதை உணர்ந்து மகிழ்ந்திருந்தார்.எப்பொழுது பழைய அதர்ம உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றதோ, இந்த உலகம் வாழ தகுதியற்றதாக மாறுகின்றதோ அப்பொழுது இந்த உலகத்தில் வைபவங்கள் மகிழ்ச்சிக்கு என்ன இடம் இருக்கின்றது. .இறைவன் படைக்கும் உலகில் அல்லவா மகிழ்ச்சி நிரந்தரமாக நிறைந்திருக்கும் எனவே,இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் தாம் தனது வானப்பிரஸ்த நிலையை அடைந்து விட்டோம் என்பதை உணரவேண்டும்.இந்த நேரத்தில் ஆன்மாக்கள் தனது பிரம்மத்தை நோக

advertisement by google

்கி திரும்ப செல்லவேண்டிய நேரமாகும். இவ்வளவு காலமாக மனிதப் பிறவிகளில் மனித சம்பந்தங்களில் வந்த ஆத்மா இந்த நேரத்தில் பரப்பிரம்மத்தில் இருக்கும் பரமாத்மாதந்தை ஈசனுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நேரமாகும்.இதுவரை பல பிறவிகளில் பல சம்பந்தங்களில் வந்த ஆன்மாவானது இந்த நேரத்தில் தந்தை ஈசனின் நினைவில் தனது பிறவியை நிறைவேற்றிக் கொள்ளும் சிருஷ்டியின் இறுதி நேரமாகும் இது. ஏனென்றால் இதற்கு பின் சத்திய யுகம் என்ற சனாதன தர்ம உலகம் இந்த உலகில் தோன்றக் கூடிய நேரம் இது. எனவே இந்தப் பாவ உலகத்திலிருந்து மனதை விலக்கி தந்தை ஈசனை தாயாக தந்தையாக நண்பனாக சத்குருவாக சர்வ சம்பந்தங்களில் நினைத்து மகிழ்ந்திருக்கவேண்டிய காலகட்டம் ஆத்மாவிற்கு இந்த நேரமே.பரப்பிரம்மத்தில் இருக்கும் பரமாத்மா தந்தையான ஈசன் இந்த நேரத்தில் மட்டுமே சிருஷ்டியில் மனித ஆத்மாக்களை முன்னேற்றம் செய்வதற்காக பிரம்மாவின் உடலில் பிரவேசம் செய்கின்ற நேரம் இது. எனவே சிருஷ்டியின் இறுதி கால கட்டமான இந்த நேரத்தில் தந்தை ஈசனைத் தவிர வேறு எந்த மனிதனிடமும் புத்தி செல்ல கூடாது என்பதை உணர்ந்த ஒருவர் அவரிடம் மனதை செலுத்த ஆரம்பிக்கின்றார். ஏனென்றால் இந்த உலகம் நிலையற்றது. பாவம் நிறைந்த உலகம் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.மேலும், மனிதப் பிறவியை நிலையற்றது என்பதை புரிந்தஅவர் அனைவர் மீதும் அன்பாகவும் பற்றட்டும் இருந்து தந்தை ஈசனிடத்தில் பற்று கொண்டவராக இந்த மனித பிறவியை நிறைவேற்றிக்கொள்கிறார்.
ஆக பழைய உலகில் சரீரத்தை விடுத்து புதிய உலகில் சென்று தெய்வீக சனாதனதர்மத்தில் உடலை எடுப்பதற்கு பெயர்தான் உண்மையிலும் உண்மையான கூடுவிட்டு கூடுபாயும் கலையாகும்.மேலும் இந்த கலையை தந்தை ஈசனே ஆத்மாவிற்கு போதிக்கின்றார். அப்படிப்பட்ட நிலையை ஒவ்வொருவரும் அடைந்து உன்னதமான சனாதன தர்மத்தை மதம் இனம் கடந்து சென்றடைய வேண்டும்.ஏனென்றால் பூமியில் சனாதன தர்மமே சொர்க்கம். அந்த நேரத்தில் பிற தர்மங்கள் எதுவுமில்லை.இன்னும் சிறிது காலமே இருக்கப் போகும் இந்த பழைய உலகத்திலிருந்து மனதை விலக்கி வரப் போகும் புதிய உலகமான சனாதன தர்மத்தில் ஒவ்வொரு ஆத்மாவும் தனது மனதை ஈடுபடுத்தவேண்டும் என்பதே தந்தை ஈசனின் விருப்பமாகும். அவரது அந்த சிரேஷ்டமான விருப்பத்தை நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நல்லது .வாழ்த்துக்கள். தந்தை ஈசனால் மனித குலத்திற்கு வழங்கப்பட்ட ராஜயோகத்தை அருகிலுள்ள பிரம்மா குமாரிகள் தியான நிலையத்திற்கு சென்று இலவசமாக கற்று பயனடைய வாழ்த்துக்கள். நல்லது. ஓம்சாந்தி.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button