சீனாவில் 10 லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு
பெய்ஜிங்: சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில்; சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை முஸ்லிம் பிரிவினர் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த தகவல்கள் சீன அரசியல் வட்டார உறுப்பினர் ஒருவரால் பெறப்பட்டதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐநா நிபுணர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கூறுகையில், சீனாவில் அடைக்கப்பட்ட 10 லட்சம் உய்குர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டதற்கு, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளன, எனக் கூறினர்.
மொத்தம் 403 பக்கங்கள் கொண்ட ஆவணங்களில் 2014ல் அப்பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் உய்குர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சீன அதிபர் ஜின்பிங், அதிகாரிகளை சந்தித்து சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.