போர் ஒத்திகை செய்த பாகிஸ்தான்.. விரைந்த இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் பதற்றம்
காஷ்மீர் விவகாரம், போருக்குத்தான் இட்டுச் செல்லும் என்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ள நிலையில், அரபிக்கடல் பகுதியில் இந்தியா தனது போர்க்கப்பல்களை தயார் நிலையில் நிறுத்தி உள்ளது.
காஷ்மீர் விவகாரம், போருக்குத்தான் இட்டுச் செல்லும் என்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ள நிலையில், அரபிக்கடல் பகுதியில் இந்தியா தனது போர்க்கப்பல்களை தயார் நிலையில் நிறுத்தி உள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தனது கோபத்தை எந்த வழியிலாவது காட்ட முயற்சி செய்கிறது.
தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்துவது, சர்வதேச சமூகத்தில், இந்தியா மீது புகார் தெரிவித்து அழுத்தம் கொடுப்பது போன்ற எல்லா முயற்சிகளையும் அந்த நாடு எடுத்து பார்த்தும், எல்லாம் தோற்றுப்போயின.