இந்தியா,ரஷ்யா,சீனா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழல் மாசை தடுக்கவில்லை டிரம்ப் குற்றச்சாட்டு ?
?♨இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கவில்லை – டிரம்ப் குற்றச்சாட்டு
நியூயார்க்,
சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காக எதுவும் செய்யவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் பொருளாதாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டொனால்டு டிரம்ப், பருவநிலை மாற்றம் “மிகவும் சிக்கலான பிரச்சினை” என்று கூறினார். மேலும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் இதை சரி செய்வதற்கான பல வழிகள் குறித்து ஆலோசித்து வருகிறேன். பூமியில் தூய்மையான காற்று, நீர் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்மிடம் இருப்பது அமெரிக்கா என்ற சிறிய நிலப்பரப்புதான். ஆனால், அந்த நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள புகைமூட்டத்தைப் போக்கவோ தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்தவோ எதுவும் செய்யவில்லை. லாஸ் ஏஞ்செல்ஸில் இருக்கும் குப்பை போதாது என்று அவர்கள் கடலில் கொட்டும் குப்பைகளும் இங்கே வந்துவிடுகின்றன. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்கள் நம்மை குறை கூறுகின்றனர்” என்று கூறினார்.
.