6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு நாளை தீர்ப்பு?
♦6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு-நாளை தீர்ப்பு
?கோவை துடியலூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது டி.என்.ஏ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
?கடந்த மார்ச் மாதம் பன்னிமடையை சேர்ந்த அச்சிறுமியை அதேப் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான்.
?பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவனை போலீசார் சிறையில் அடைந்தனர். இவ்வழக்கில் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது.
?இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை மூலமாக அம்பலமாகி உள்ளது.
?இது குறித்து சந்தோஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.