தஞ்சைபெரிய கோவிலில் நந்தி சிலையை உடைக்க முயற்சி?
தஞ்சை பெரிய கோவிலில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நந்தி சிலையை உடைக்க முயற்சி
தஞ்சை பெரிய கோவில் கருவறைக்கு முன்பாக கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நந்தி சிலையை உடைக்க முயன்ற அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருவுடையார் சன்னிதானத்திற்கு எதிராக இரண்டு நந்தி சிலைகள் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பாதுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலையில் திடீரென ஒருவர் கண்ணாடிப் பெட்டியை உடைக்க முயற்சி செய்தார். இதனைக் கண்ட கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர், எனினும் விசாரணையில் அவர் எற்காக உடைக்க முயன்றார் என்ற தகவலை தெரிவிக்காததால் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.