தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது மாட்டு சாணம் வீசியதாக புகார் எழுந்துள்ளது
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
ஆனால் பாஜக, திருக்குறளே ஒரு இந்து சனாதான தர்மத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல் என்கிறது.
பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா இக்கருத்தை வலியுறுத்தி தமது ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் பல்வேறு குறள்களை மேற்கோள்காட்டி இந்து தெய்வங்கள் இதில் இடம்பெற்றுள்ளன என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது
இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்காக்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில் தஞ்சாவூர் வல்லம் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது மாட்டு சாணத்தை மர்ம நபர்கள் வீசியதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூச்சை திணற வைக்கும் காற்று மாசு.. டெல்லியில் வாகன கட்டுப்பாடு இன்று முதல் அமல்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன், திருவள்ளுவர் மனித குலத்துக்கு பொதுவானவர். யாருக்கும் எதிரானவர் அல்ல. இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது. அவரது சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.