முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலம் – கோவையில்போலீஸ்சார் தீவிர விசாரணை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவை: முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலம் – போலீஸ் தீவிர விசாரணை!
கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுமி, 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை அந்த சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து, மகளை காணவில்லை என்று அவரின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அதேபோல, சிறுமி வீட்டிலும் அவரை தேடி வந்தனர்.
இதனிடையே, சிறுமி வீட்டின் அருகில் ஓர் முட்புதரிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அவர்களும், அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது, கைக் கால்கள் கட்டப்பட்ட நிலையில் துணியில் சுற்றப்பட்டு ஓர் பெண் சடலம் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதையடுத்து, உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணையில் இறங்கினார்கள். அதில், அது மாயமான சிறுமியின் உடல் என்பது தெரியவந்தது.
பின்னர், சிறுமியின் உடலை உடற் கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி கடைசியாக செல்போனில் பேசியபடி சென்றதை அங்கிருந்தவர்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது. பகுதி மக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் போலீஸார், சிறுமி எதற்காக கொலை செய்யப்பட்டாரா, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.