1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?
2.அடுப்புப் புகையைப் பல மடங்கு சுவாசித்த கிழவிகளை விட சிகரெட் புகைத்தவன் பலருக்குப் புற்றுநோய் வருவது ஏன்?
3.கள்ளச் சாராயம் குடித்தக் கிழவனை விட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?
4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தைத் தேய்த்து விட்டு வேலையைத் தொடர்பவன் எங்கே? எறும்புக் கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?
5.நெல் அறுவடை செய்யும் போது விரலை அரிவால் வெட்டி விட்டால் கையில் களிமண்ணை அப்பிக் கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டுக் கட்டுப் போடுபவன் எங்கே?
6.அழுக்கு மணலில் விழுந்து பிறண்டு விளையாடியக் குழந்தையை விட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏன்?
7.உண்ட கையோடு ஓடி வந்து பிரசவம் பார்த்து ஆரோக்கியக் குழந்தையை அள்ளிக் கொடுத்த கிழவிகளின் கையை விட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டுக் கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?
காரணம் மிகச் சிறிது.
இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.
நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.
எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிற்றுவலி கைகால் வலி அவ்வளவு தான்.
ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாகக் குறைக்கப்படும்.
எந்த நோயும் மனிதனைக் கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம் தான் அவனைக் கொல்கிறது. இயற்கைத் தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.
உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.
என்னைப் பொறுத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமுமாகி விடுகிறது.
நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.
வெயிலைக் கண்டு அச்சப்படாதீர்கள்
காற்றைக் கண்டு பயப்படாதீர்கள்
குளிரில் ஸ்வெட்டர் போட்டுப் பதுங்காதீர்கள்
சுடுதண்ணீரில் ஒருபோதும் குளியாதீர்கள்
சின்னச் சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்
இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்
இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் வாழ்க வளத்துடன்.