பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்

புனிததீர்த்தம் துளசி தீர்த்தம் தயாரிக்கும் முறை மருத்துவகுணங்கள்

advertisement by google

புனித தீர்த்தம்…!

advertisement by google

காலம் காலமாக நம் இல்லங்களில் , ஆலயங்களில் வழங்கப்பட்ட தீர்த்தம் , அதில் உள்ள மருத்துவ குணங்கள் , அந்த தீர்த்தத்தை தயாரிக்கும் முறை

advertisement by google

இந்தியாவில் ஆன்றோர்கள் புனித
ஆலயங்களின் வழிபாடுகள் மூலம்
சூட்சுமமாக உடல் நோயும் , உளநோயும்
நீங்கி நலம்பெற வழி வகுத்துள்ளனர்
ஆலயங்களை வலம்வருதல், அங்கங்கள்
பூமியில் பட விழுந்து வணங்குதல்,
அங்கப்பிரதட்சணம் செய்தல், காவடி எடுத்தல், திருமண் இடுதல், திருநீறு , சந்தனம், குங்குமம் அணிதல், திருத்துழாய் (துளசி), வில்வம், பயன்படுத்துதல் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் அனைத்தும் உடலும் , உள்ளமும் நலம்பெற அமைந்துள்ளன.

advertisement by google

ஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.

advertisement by google

வைணவ திருத்தலங்களில் வழங்கும் “துளசி தீர்த்தம்” இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை
வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம்
தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.

advertisement by google

சைவத்திருத்தலங்களில் வழங்கும் “வில்வ
தீர்த்தம்” குன்மம், வயிற்றுக் கடுப்பு,
மேகவாயு, போன்றவைகளைப்
போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப்
புண்ணையும் போக்குகின்றது.
ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட
இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார்
செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம்
உண்டு

advertisement by google

நாம் வீட்டிலேயே செய்து உண்டு
பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம்.

advertisement by google

இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப்
போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு
அளிக்கும் குணம் கொண்டது.

புனித தீர்த்தம்


1 – ஏலம்,
2 – இலவங்கம்,
3 – வால்மிளகு,
4 -ஜாதிப்பத்திரி,
5 – பச்சைக் கற்பூரம்
இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு
பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு
சேர்க்கவும்.

முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி
இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு
பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து
இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை
பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில்
வைக்கவும்.

இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல்அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.

இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள்
வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி
பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து
அருந்தலாம்.

இருதயம், இரைப்பை பலம் பெரும், கண்கள்
பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு,
மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல்,
மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள்
நீங்கும். இரத்தம் பெருகும் .

இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும்
வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து
முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட
அரிய முறையாகும்.

துளசி தீர்த்தம்…


இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது.

மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசிகலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக விநியோகிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

துளசி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட காலநிலைகளிலும் வளரக் கூடியதாகும். துளசி அதிகமாக வளரும் பகுதிகளில் உள்ள சயனைட் போன்ற விசவாயுக்களை உள்ளெடுத்து கூடுதலான ஒட்சிசன் நிறைந்த வாயுவை வெளியிடும். இது மனிதர்கள் சுவாசத்திற்கு சிறந்த புத்துணர்ச்சி தரும். அத்துடன் நுளம்புகள் துளசிச்செடி உள்ள சுற்றாடலில் காணப்படுவதில்லை.
துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

துளசி ஊறப் போட்ட தூய நீரை உட்கொண்டு வந்தால் இருதய நோய்கள் குணமாவதுடன் இருதயமும் வலிமை பெறும்.

கோவில்களில் துளசி கலந்த புனித நீர் தீர்த்தமாக விநியோகிப்பதை நாம் அறிவோம்.

ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது.

துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த துளசி செடியை வணங்கிவந்தால் இவர்களை வணங்கியதற்க்கு சமனாகும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

துளசியின் தாவர வியற் பெயர் Ocimum sanctum இது Labiatae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது.

பஞ்ச பத்ர பாத்திரம்’…….


பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை இங்கே பதிவு செய்யவிரும்புகிறேன்…..

1.இல்லங்களில் பூஜையின்பொது ‘ பஞ்ச பாத்திரம் ‘ என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.

அதன் இயற் பெயர் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பதாகும்.
அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்..

~ துளசி, ~ அருகு, ~ வேம்பு, ~ வில்வம், ~ வன்னி
ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள்.

இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’.
இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.

இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.

இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

~ சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம்,
~ திருமாலுக்கு உகந்தது துளசி,
~ அம்மனுக்கு வேப்பிலை,
~ விநாயகருக்கு அருகம் புல்,
~ பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.

  1. பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில் விளக்கம்

•பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்
பயன்பாடு
பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.

அதென்ன பஞ்ச பாத்திரங்கள்?
அர்க்கயம் – கைகளுக்கு, பாத்யம் – பாதங்களுக்கு, ஆசமனீயம் – இது ஆசமனம், ஸ்நானீயம் – திருமேனிக்கு, சர்வார்த்த தோயம் – மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!

இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!

• நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்!
மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்!

தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:

பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.

3.பஞ்சமுகம்…… இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு.
வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.

முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.

அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று குறிப்பிடுகிறோம்.

துளசி நீர்.


மருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு அம்மாக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவங்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்த அம்மாவை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர். உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்….. ரொம்ப. அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான். ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க அதிக பக்ஷம் இன்னும் 3 மாதங்கள் தான் உயிரோடு இருப்பீங்கனு. அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அவுங்க செத்து கொண்டு இருந்தார்கள்.

எனது நண்பர் பில்டர் சதீஷ் சொன்னதின் பேரில். நான் அவங்களை நேரில் சென்று பார்த்து கவுன்சிலிங் கொடுத்து. தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவங்களுக்கு சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரை தெரியுமா. உலகின் மிக கொடிய நோயான பயத்தை.

இப்பொழுது அந்த அம்மா. பயபடுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் முதலில் துங்கி எழுந்தவுடன். அவுங்க. சிரித்த முகத்துடன் கண்ணாடியை பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்யமாக இப்பொழுது அவங்களுக்கு இருக்கு.

சென்ற 2015 ஏப்ரல் மாதம் அந்த அம்மாவிற்கு மருத்துவர் 3 மாதம் கெடு விதித்தார்.

இன்றுவரை அந்த அம்மா ஆரோக்யமாக இருக்காங்க. மரபணு மாற்றப்பட்ட காய்கள், பழங்களை தெரிந்தோ, தெரியாமலோ நாம் உண்பது புற்று நோய் வருவதற்கான முக்கிய காரணம். வடக்கே பல இடங்களில் புற்று நோயாளிகளுக்கு என்று தனியாக சிறப்பு ரயில் விடும் அளவு புற்று நோயாளிகள் அங்கு இருக்கிறார்கள்.

புற்று நோய் என்று அல்ல. 448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.

துளசியின் மகத்துவம் பாப்போம்.


ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊர வைக்க வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். ஆரம்ப நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய் மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம்.

ஏன்? செம்பு பாத்திரம்.


தாமிர சக்த்து [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குனப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி செய்யும் சக்தி தாமிரத்திர்க்கு உண்டு. தாமிர பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே. உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர்.
துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர் அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் பலர் கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது.

Tulsi Cures Cancer என்று google ளில் டைப் செய்து பாருங்கள். இதே போல். பல ஆய்வுகளின் முடிவை google சொல்லும்.

வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும் தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்யத்திற்கு அவ்வளவு நல்லது.

பெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது உங்களுக்கு புரிகிறதா…. .

 

advertisement by google

Related Articles

Back to top button