எட்டுநாயக்கன்பட்டி தூய மிக்கேல் அதிதூதர் திருவிழா சப்பரபவனி✍️பாளை மறை மாவட்ட காமநாயக்கன்பட்டி திருத்தலம் பேராலயமாக உயர்த்தப்பட்ட அருள்நிறை முதல் ஆண்டில் பங்கு தந்தை & திருத்தல பேராலய அதிபர் அருட்திருஅந்தோணி குருஸ் தலைமையில் எட்டுநாயக்கன்பட்டி தூய மிக்கேல் அதிதூதர் திருவிழா திருப்பலி
கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயக்கன்பட்டி தூய மிக்கேல் அதிதூதர் திருவிழா கடந்த 20-09-2023 ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 ம் திருவிழா நடைபெற்றுவருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 9-ம் திருவிழா மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை பாளை மறை மாவட்ட காமநாயக்கன்பட்டி திருத்தலம் பேராலயமாக உயர்த்தப்பட்ட அருள்நிறை முதல் ஆண்டில் பங்கு தந்தை & திருத்தல பேராலய அதிபர் அருட்திருஅந்தோணி குருஸ் தலைமையில் நடந்தது. இந்த ஆராதனையில் பாளைமறைமாவட்ட முன்னால் ஆயர் ஜீடு பால்ராஜ் தலைமையில் கொடியேற்றத்திருப்பலியும், ஒன்பதாம் திருவிழா பாளைமறைமாவட்ட ஆயர் மேதகு ஆயர் S. அந்தோணிச்சாமி அவர்கள் தலைமையிலும் , எட்டாம் திருவிழா பாளைமறைமாவட்ட பொருளாளர் அருட்திரு SA அந்தோணிச்சாமி அவர்கள் தலைமையிலும் , பத்தாம் திருவிழா காலை 8 மணிக்கு அருட்திரு M அருள் அம்புரோஸ் அவர்கள் தலைமையிலும் பங்கு இறை மக்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் உருவ சப்பர பவனி நடந்தது.10-ம் திருவிழாவான காலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் பாளை மறை வட்ட முதன்மை குரு மண்ணின் மைந்தர்கள் அருட்திரு A.S. சூசைசெல்வராஜ் , அருட்திரு M.கில்பர்ட் OSM , அருட்திரு V.கிறிஸ்டோபர் SDB இத்தாலி அவர்கள் தலைமையில் நடக்க இருக்கிறது. காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழங்குதல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் உருவ சப்பர பவனியும் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். அன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனியும் , 30-09-2023 தேதி இல்லத்திற்கு இனிமை சேர்ப்பவர்கள் மாமியாரா? மருமகளா? இன்னிசை சிறப்பு பட்டி மன்றம் சன்டிவி விஜய் டிவி புகழ் Mrs S. அன்னபாரதி MSCM phil தலைமையில் நடக்க இருக்கிறது. தினமும் அசனவிருந்தும், வாகன வசதியும் நடைபெற்று வருகிறது.