சூடான் நாட்டில் இன்றும் நடைமுறையிலுள்ள சிலுவையில் அறையும் தண்டனை?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
சூடானில் இன்றும் உள்ள சிலுவையில் அறையும் தண்டனை…
சமீபத்தில் படித்ததில் அதிக ஆச்சரியமும் பயமும் தந்தது இந்தச் செய்தி. சூடான் நாட்டில் தவறு செய்தவர்களுக்கு சிலுவையில் அறைந்து மரண தண்டனையை நிறைவேற்றும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
கடைசியாக(இண்டர்நெட் நிலவரப்படி) கடந்த மே மாதம் ஆறாம் தேதி 3 பேரை சிலுவையில் அறைந்துள்ளார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், இந்த மூன்று பேரையும் முதலில் தூக்கிலிட்டுக்கொன்று பின் சிலுவையில் அறைந்துள்ளார்கள்.
ஏதோ கருணையில் இப்படிச் செய்தார்கள் என்று நினைக்காதீர்கள். அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனைகளின் வரிசைப்படி முதலில் தூக்கிலும் பின் சிலுவையிலும்.. சூடான் சட்டத்தின்படி, ஆயுதங்களின் உதவியுடன் திருடினால் தூக்கு தண்டனையும், அப்படித் திருடும் திருடர்கள் யாரையாவது கொன்றுவிட்டால் சிலுவையில் அறையும் தண்டனையும் அளிக்கப்படுகிறது.
மே மாதம் சிலுவையிலறையப்பட்ட மூன்று பேருக்கும் முதலில் தூக்கு தண்டனையும் பின் சிலுவையில் அறையும் தண்டனையும் நிறைவேற்றப்பட்டதன் காரணம் இது தான்.
படிக்கும்போதே மனதை என்னமோ செய்யவில்லை? என்ன விதமான சட்டமோ, என்ன விதமான தண்டனையோ….