இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சீமான்பதிலடி :என்னைஎதிர்த்து காங்கிரஸ்கட்சி போராடுவது மகிழ்ச்சியளிக்கிறது

advertisement by google

ராஜீவ் காந்தி கொலை குறித்த தமது பேச்சை திரும்பப் பெறப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி தந்துள்ளார்.

advertisement by google

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசினார் என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு. இதற்காக காங்கிரஸ் கட்சியினர் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும் சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டதால் போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சீமான் கூறியதாவது: என்னை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு! அப்படி வழக்குப் பதிவு செய்தாலும் அதை எதிர்கொள்வேன். இதுபோல் எத்தனையோ வழக்குகளைப் பார்த்துவிட்டேன். ராஜீவ் காந்தி குறித்த என் கருத்து எதனையும் திரும்பப் பெறப் போவதில்லை. ராஜீவ்காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை இலங்கையில் என்ன செய்தது என்பதை என்னுடன் விவாதிக்க தயாரா? இதே தமிழக சட்டசபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் படத்தை பச்சை குத்திக் கொண்டு எனது தம்பிகள் சட்டசபைக்கு செல்லும் காலமும் வரும்.இவ்வாறு சீமான் கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button