t

மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் சிவகங்கையில் பரபரப்பு

advertisement by google

?winmeennews.com?

advertisement by google

சிவகங்கை மாவட்டத்தில் பாலியல் வழக்கு ஒன்றில் பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

advertisement by google

சிவகங்கை மேலூர் சாலை பொதிகை நகரை சேர்ந்தவர் சிவகுரு துரைராஜ் (61). இவர் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் செவிலியர் பயிற்சி மற்றும் கேட்டரிங் தொழிற்படிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் 19 வயது மாணவி ஒருவர் படித்து வந்தார்.

advertisement by google

இந்நிலையில் சிவகுரு துரைராஜ் மாணவியிடம் தனக்கு சாதகமாக நடந்தால் கூடுதலாக உள்ளீட்டு மதிப்பெண் போடுவதாக கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மாணவியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். இதில் சிவகுரு துரைராஜ் தன்னிடம் தவறாக நடந்ததை கூறியுள்ளார்.

advertisement by google

இதனையடுத்து சிவகங்கை நகர காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளிக்கப்பட்டது. மாணவியின் தாய் கொடுத்த புகாரையடுத்து,பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சிவகுரு துரைராஜை கைது செய்த நகர காவல் நிலைய ஆய்வாளர் மோகன் சம்பவம் குறித்து சிவகுருவிடம் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button