மத்தியப் பிரதேசத்தில் புகையிலை தர மறுத்ததால் அண்ணியை கோடாரியால் வெட்டிய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணியின் மகனையும் வெட்டியதில், மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாத்ஹோல் பகுதியைச் சேர்ந்தவர் ராம்லா கோல் (30). இவர் தனது அண்ணனின் மனைவியான ஷுக்கி பாய்யிடம் (35) புகையிலை கேட்டுள்ளார். அண்ணி புகையிலை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராம்லா, நள்ளிரவின் அண்ணியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனது 5 வயது மகனுடன் தூங்கிக்கொண்டிருந்த அண்ணியின் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் சிறுவன் மீதும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பியோஹாரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வெட்டுக்காயங்களுடன் அண்ணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தப்பியோடிய இளைஞர் குறித்து காவல் துறையினர் விசாரண